Author: Meykandar

  • Understanding the Term Śvāmī

    Understanding the Term Śvāmī


    TaHiEnFrEs

    சீடன் – சாமி என்பதற் கருத்தமென்ன?

    குரு – ‘ஸ்வாமி’ என்னும் வடமொழி, தென்மொழியிற் சாமியென விகாரப்பட்டது. சுவாமியென்றுஞ் சொல்லப்படும்.

    ஸ்வம் = சம்பத்து. அதனையுடையான் ஸ்வாமியெனவாம். அந்தச் சம்பத்து, பரம சம்பத்தாகலின் ஆன்மகோடிகட்கு அதனை அருளாலருள் பரமகுருவென்று பொருள் படுத்தப்படும். அதனால், ஆசானென்னு நாமப்பொருளையும் பொருந்தும்.

    வேதத்தில் வெளிப்படும் ஆன்ம குகையிலிருத்தலிற் குகனென்னும் பெயர் குமாரனொருவனுக்கே வழங்கப்படுதல் போல இந்தச் சாமியெனும் பெயரும் அவனொருவனுக்கே வழங்கப்படுவதாயிற்று. அதனாலன்றோ சரவணபவனிருக்குஞ் சயிலம் சாமிமலையென விளங்குகின்றது. ஆகலின்,மகேசுரனடியாரை மாகேசுரரெனச் சொல்லுமாற்றாற் போல் சாமியினடியாரைச் சாமிகளெனச் சொல்லலும் மரபே.

    இதனை ஏனையோர்க்குச் சொல்லுவதும்,யாதொரு பெயரோடு புனைவதுஞ் சிறப்புண்டாக்கும் பொருட்டே ஆம்.

    பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சுப்ரமண்ய வியாசத்தில் இருந்து…

  • The Six Faces of Ṣaṇmukha: A Study of Śaiva Tradition

    The Six Faces of Ṣaṇmukha: A Study of Śaiva Tradition


    TaHiEnFrEs

    சீடர்: அறுமுகன் என்பதற்குக் கருத்தமென்ன?

    குரு: ஆறு முகமுடையவன் எனவாம். விவரம்: சிற்சத்தியாகிய சிவசத்தியினுடைய முகமொன்று, சிவனுடைய முகம் ஐந்தும் ஆக ஆறு முகங்கள் உள்ளன. இந்த ஆறு முகங்களும் ஆன்மாக்கள் விருப்பு நிறைவேறுமாறு அருளால் செய்யப்படும் ஸிருட்டி யாதி பஞ்சகிருத்திய நிமித்தம் அபேத சிவசத்தியாய் சிற்சத்தியில் பத்திலொரு கூறு வலியுள்ள மஹாசாதாக்கிய மென்னும் தத்துவமும் மஹாசாதாக்கியமென்னும் மூர்த்தியும் பொருந்தின கீழ் நோக்காயுள்ள அதோ முகமும், பராசத்தியிற் பத்திலொரு கூறு வலியுள்ள சாதாக்கியமென்னுந் தத்துவமும் சதாசிவனென்னு மூர்த்தியும் பொருந்தின மேனோக்காயுள்ள ஈசானமுகமும், ஆதி சத்தியிற் பத்திலொருகூறு வலியுள்ள அமூர்த்திசாதாக்கிய மென்னுந் தத்துவமும் ஈசனென்னு மூர்த்தியும் பொருந்தின மேற்கு நோக்காயுள்ள சத்தியோசாத முகமும், இச்சாசத்தியிற் பத்திலொருகூறு வலியுள்ள மூர்த்திசாதாக்கியமென்னுந் தத்துவமும் பிரமீச னென்னு மூர்த்தியும் பொருந்தின வடக்குநோக்கா யுள்ள வாமதேவமுகமும், ஞானசத்தியிற் பத்திலொரு கூறு வலியுள்ள கர்த்திருசாதாக்கிய மென்னுந் தத்துவமும், ஈசுரனென்னு மூர்த்தியும் பொருந்தின தெற்கு நோக்காயுள்ள அகோரமுகமும், கிரியாசத்தியிற் பத்திலொருகூறு வலியுள்ள கன்மசாதாக்கியமென்னுந் தத்துவமும் ஈசானனென்னு மூர்த்தியும் பொருந்தின கிழக்கு நோக்காயுள்ள தற்புருட முகமுமாம் என்ப.

     அறுமுகங்கட்குமுரிய பிரமாணம் – சம்பவகாண்டத்து நரு-ம் அத்தியாயத்து எ -ம் சுலோகத்தில் “நங்குமா ரன் உனது சுவரூபத்தையும், எனது சுவரூபத்தையுங் கொண்டவன். ஆகலின் அறுமுகனாயினன்” எனக் கிரிகுமாரிக்குக் கிரிவில்லி கிளத்தியதாக வருவதூஉம், திருச்செந்தூர்க் கந்தர்கலிவெண்பாவில் “வெந்தகுவர்க் காற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி -யைந்து முகத்தோ டதோமுகமுந் – தந்து திருமுகங்க ளாறாகிச் செந் தழற்க ணாறும் -ஒருமுகமாய்த் தீப்பொறியா றுய்ப்ப” எனக் குமரகுருபர சுவாமிகள் குயின்றதாக வருவதூஉ மாம். சண்முகங்களுள், சாற்றிய கலிவெண்பாக் கூறுமாறு சூரனைத்தடிந்து பகைவருயிர் சிந்திய முகம்,உயிர்களின் ஊழ்வினையை மாற்றிப் பேரின்ப சுகந்தரு முகம், வேதங்களையு மாகமங்களையு முடிக்கு முகம் , பாசவிருளை நீக்கிச் சோதிமயமாய் விளங்கு

    முகம் , தேவசேனைக்கும் வள்ளியம்மைக்கு மோக

    முதவு முகம் , தன்னடி சேர்வார்க்கு வரமளித்தருளுமுகம்  எனவுஞ் சிலர் கூறுப.

    கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, மேல், கீழ்

    என்னும் ஆறு முகத்துஞ் சிதாகாசமாக நிறைந்திருக்கும் பரமான்மா ஷண்முகனெனவாம். 

    ஷட் + முகம் = ஷண்முகம். ஷட் = ஆறு.

    அத்தியாச்சிரம சுத்தாத்துவைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிச்செய்த ஶ்ரீ சுப்பிரமணிய வியாச(1893 – முதற்பதிப்பு)த்தில் இருந்து.

  • Śivaprakāśaḥ – Śiva’s Grace and the Soul’s Liberation

    Śivaprakāśaḥ – Śiva’s Grace and the Soul’s Liberation


    TaHiEnFrEs

    ஆன்மாக்களோ எண்ணில அவற்றின் தராதரங்களும் கணக்கில. தத்துவக்கூட்டங்களும் அப்படிப் பட்டவையே. இவற்றையெல்லாம் எப்படி அறிந்து தவறில்லாமல் கூட்டியும் பிரித்தும் சிவபெருமானால் செயல்புரியமுடியும் என்று நாம் எண்ணக்கூடும். சிவபெருமான் நிறைந்த ஞானமயன். அவனால் அறியப்படாதது எதுவும் இலது. அங்ஙனம் அறிந்து செயல் புரிவதனால் சிவபெருமானுக்கு அறிவுக்குறை நேரிடுவதில்லை. வாயுமண்டலத்துட்பட்டுள்ள உயிர்கள் சுவாசிப்பதனால் வாயுமண்டலம் வற்றிப்போவது இல்லை. நிறைந்த ஞானநிலபத்துட்பட்டிருக்கும் உயிர்கட்கு உதவிபுரிவதனால் சிவபெருமானுக்கு ஏதும் குறைவோ மாறுபாடோ ஒருபோதும் உண்டாவதில்லை, நிறைந்த ஞானம் குறைவுபடுவதில்லை என்பதை ‘பொங்கு ஒளி ஞானம்’ என்ற சிவப்பிரகாசம் தொடர்காட்டும். அத்தகைய ஞானப் பொருள் என்றும் நீக்கமற நிற்பது. 

    மேற்கூறப்பட்டபடி, பேரறிவுப்பொருள் உதவி புரிதலால் என்னபயன் ஆன்மாவுக்கு ஏற்படும் என நாம் கருதக்கூடும். சிவம் இங்ஙனம் துணைபுரிவதனால் ஆன்மாவுக்குள்ள மலமறைப்பு அகலலுறும். இதன் பயனாகப் பாசஞான பசுஞானங்கள் விலகலுறும். முற்றறிவு எனப்படும் சிவஞானம் விளைதலுறும். இவ்வாறான சிவஞானவிளைவினால், ஆன்மா, தன்னை – தன் இயல்பினை – அறியலுறும். இதனை ஆன்மதரிசனம் என்பர். இதனால் ஆன்மா மலநீக்கம்பெற்றுத் தூய்மை உறும். இதனை ஆன்மசுத்தி என்பர். இவற்றின்பயனாக ஆன்மா, உண்மைமுத்தி வாய்ப்புக்கான சீவன்முத்தித்திறம் இம்மையிலே வாய்க்கப்பெற்றிடும். இதனை ஆன்மலாபம் என்பர். இங்ஙனம் இம்மூன்று நலங்களைையும் நண்ணப்பெறுதலே இங்கு அதன்பயன் எனக்குறிக்கப்பட்டது.

    திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன வெளியீடான சிவப்பிரகாசம் சீர்மைக்கட்டுரை [மூன்றாஞ் சூத்திரம் – ஆன்ம இலக்கணம்](1966) என்னும் நூலில் இருந்து.

  • Guru Tattvasya Mahatvam – The Significance of Guru Worship in Śaiva Siddhānta

    Guru Tattvasya Mahatvam – The Significance of Guru Worship in Śaiva Siddhānta


    TaHiEnFrEs

    தீவினையாளர் சம்பந்தத்தானே ஒருவன் எங்கனம் பதிதனாகின்றானோ அங்ஙனமே குருவின் சேர்க்கையால் புண்ணிய பலன்களை அடைகின்றான்.

    தீயின் சேர்க்கையானே பொன்னானது களிம்பைப் போக்கிக் கொள்வதேய்ப்ப, குருவழிபாட்டானே மனிதர்கள் பாவங்களைக் கழிக்கின்றார்கள். நெருப்பின் அண்மையிலுள்ள நெய்க்குடம் எங்ஙனம் இலயமடைகின்றதோ, அங்ஙனமே குருவின் அண்மையிலிருப்பவன் தன் பாவங்கள் யாவும் இலயமடையப்பெறுவான். கொழுந்துவிட்டெரியும் நெருப்பானது உலர்ந்த விறகுகளை எங்ஙனம் எரிக்குமோ, அங்ஙனமே மேலாம் உவகைப்பாட்டி கையுடைய இந்தக் குரவனும் சீடன்றன் பாவங்களைக் கணப்போதிலே தகிக்கின்றான். 

    மனம், வாக்கு, காயம் என்ற மூவகைக் கரணங்களாலும் குருவைப் பிழைத்தலாகாது. அவருடைய சினத்தானே ஆயுளும், வெறுக்கையும், மெய்யுணர்வும், நற்றொழில் எனப்படூஉம் புண்ணியங்களுஞ் சுடப்படுகின்றன என்று உரைத்தலானே, ஆயுள், செல்வம், தத்துவ உணர்ச்சி, புண்ணியங்கள் என்னும் இவைகள் மேன்மேலும் வளருமாறும், மலவிருள் தேயுமாறும் நன்னெறி காட்டி உய்வித்த குருசெய்த நன்றியை எஞ்ஞான்றும் மறவாது, மனம் வாக்குகள் ஒருமைப்படக் காயத்தினால் அவரை வணங்குதலும் இன்றி அமையாது வேண்டப்படுமாதலானும்,

    यं यं लोकं मनसा संविभाति विशुद्धसत्त्वः ।

    कामयते याञ्च कामान् तन्तं लोकं जयते ।

    ताञ्च कामान् तस्मादात्मज्ञं ह्यर्चयेत् भूतिकामः ।।

    யம் யம் லோகம் மனஸா ஸம்விபா⁴தி விஶுத்³த⁴ஸத்த்வ꞉ |

    காமயதே யாஞ்ச காமான் தந்தம் லோகம் ஜயதே |

    தாஞ்ச காமான் தஸ்மாதா³த்மஜ்ஞம் ஹ்யர்சயேத் பூ⁴திகாம꞉ ||

    எவன் எவ்வெவ்வுலகினை மெய்யுணர்வானே எண்ணி

    விசுத்த சத்துவமுடையனாகி, எவ்வெப்பயனை விழைகின்றானோ அவன் அவ்வவ்வுலகங்களை அடைந்து அவ்வப்பயன்களைப் பெறுகின்றான் ஆகலின், பரசிவனை உள்ளவாறு உணர்ந்த அத்தன்மையனாகிய சிவஞானியைத் திருவருட்செல்வம் விழைவுறூஉம் ஒவ்வொருவரும் பணிவாராக என வேதமகா வசனங்கள் முழங்குதலானும், அங்ஙனமே சிவாகமங்களாகிய பரவித்தைகளும் முழங்கலானும் குரவனே தெய்வமெனக்கொண்டு வணங்கியதெனக் கடைப்பிடிக்க.

    திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன வெளியீடான சிவஞானபோத மாபாடியத்திரட்டு(1977) என்னும் நூலில் இருந்து…

  • Puṣpadevatā: A Study of Flowers and their Presiding Deities

    Puṣpadevatā: A Study of Flowers and their Presiding Deities


    TaHiEnFrEs

    ஒவ்வொரு பூவுக்கும் அதிதெய்வம் உண்டு.

    • நந்தியாவர்த்தம் – நந்தி
    • எருக்கம் பூ – சூரியன்
    • சண்பகம், கடம்பம், குரா – முருகப்பெருமான்
    • மகிழம் பூ – கலைமகள் .
    • தாமரைப்பூ – சிவபெருமான்.
    • அறுகு – விநாயகர்
    • அலரிப் பூ – பிரம்மா .
    • கொக்கிரகம்பூ – திருமால்
    • வில்வத் தளிர் – திருமகள்
    • மல்லிகை, முல்லை, நீலோற்பலம் – உமையம்பிகை.

    ‘சிவாகமங்கள் ஓர் அறிமுகம்’ என்னும் நூலில் சிவஸ்ரீ சபாரத்தினம் சிவாச்சாரியார் அவர்கள்.

    प्रत्येक फूल का अपना अधिदेवता होता है। कुछ उदाहरण हैं:

    • नंदियावर्तम / नंदी एरुक्कम फूल – सूर्य (सूर्य देवता)
    • चण्पकम, कटम्बम, कुरा – मुरुकप्पेरुमान (भगवान मुरुगन)
    • मकिलम फूल – कलाइमगल (सरस्वती माता)
    • तामरई पूपू (कमल) – शिवपेरुमान (भगवान शिव)
    • अरुकु (दूर्वा घास) – विनायक (भगवान गणेश)
    • अलरी पूपू – ब्रह्मा (सृष्टिकर्ता)
    • कोक्किरकम पूपू – तिरुमाल (भगवान विष्णु)
    • विल्व पत्र – तिरुमगल (लक्ष्मी माता)
    • मल्लिकाई, मुल्लई, नीलोत्पलम – उमैयम््मिकाई (पार्वती माता)

    ये संबंध “शिवागमंगल ओर अरिमुकम” पुस्तक में शिवाचार्य शिवश्री सबारत्तिनम द्वारा उल्लिखित हैं।

    Each flower has its own presiding deity. Here are some examples:

    • Nandiyāvartam / Nandi Erukkam flower – Sūrya (Sun God)
    • Caṇpakam, Kaṭambam, Kurā – Murukapperumāṇ (Lord Murugan)
    • Makilam flower – Kalāmakal (Goddess of Learning, Saraswati)
    • Tāmaraip Pū (Lotus) – Śivaperumāṇ (Lord Shiva)
    • Aruku (Durva grass) – Viṉāyakar (Lord Ganesha)
    • Alari Pū – Brahmā (Creator God)
    • Kokkirakam Pū – Tirumāl (Lord Vishnu)
    • Vilva leaves – Tirumakal (Goddess Lakshmi)
    • Mallikai, Mullai, Nīlōṭpalam – Umaiyam’mikai (Goddess Parvati)

    These associations are mentioned in the book “Śivāgamaṅgal Oru Aṟimukam” by Śivāccāriyār Śivāśrī Capārattinam.

    Chaque fleur a sa propre divinité tutélaire. Voici quelques exemples:

    • Nandiyāvartam / Nandi Erukkam – Sūrya (Dieu du Soleil)
    • Caṇpakam, Kaṭambam, Kurā – Murukapperumāṇ (Dieu Murugan)
    • Makilam – Kalāmakal (Déesse de l’apprentissage, Saraswati)
    • Tāmaraip Pū (Lotus) – Śivaperumāṇ (Dieu Shiva)
    • Aruku (herbe Durva) – Viṉāyakar (Dieu Ganesha)
    • Alari Pū – Brahmā (Dieu créateur)
    • Kokkirakam Pū – Tirumāl (Dieu Vishnu)
    • Feuilles de Vilva – Tirumakal (Déesse Lakshmi)
    • Mallikai, Mullai, Nīlōṭpalam – Umaiyam’mikai (Déesse Parvati)

    Ces associations sont mentionnées dans le livre “Śivāgamaṅgal Oru Aṟimukam” de Śivāccāriyār Śivāśrī Capārattinam.

    Cada flor tiene su propia divinidad tutelar. Aquí hay algunos ejemplos:

    • Nandiyāvartam / Nandi Erukkam – Sūrya (Dios del Sol)
    • Caṇpakam, Kaṭambam, Kurā – Murukapperumāṇ (Dios Murugan)
    • Makilam – Kalāmakal (Diosa del aprendizaje, Saraswati)
    • Tāmaraip Pū (Loto) – Śivaperumāṇ (Dios Shiva)
    • Aruku (hierba Durva) – Viṉāyakar (Dios Ganesha)
    • Alari Pū – Brahmā (Dios creador)
    • Kokkirakam Pū – Tirumāl (Dios Vishnu)
    • Hojas de Vilva – Tirumakal (Diosa Lakshmi)
    • Mallikai, Mullai, Nīlōṭpalam – Umaiyam’mikai (Diosa Parvati)

    Estas asociaciones se mencionan en el libro “Śivāgamaṅgal Oru Aṟimukam” de Śivāccāriyār Śivāśrī Capārattinam.

  • Tiruvaiyāru: The Southern Kailasa, a Sacred Site of Liberation

    Tiruvaiyāru: The Southern Kailasa, a Sacred Site of Liberation


    TaHiEnFrEs

    திருவையாற்றில் அப்பர் பெருமான் கண்ட திருக்கயிலாயக் காட்சி

    திருநாவுக்கரசு சுவாமிகள் தொண்டில் பழுத்த சைவர்…தன்னுடைய இறுதிக் காலத்தில், திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் ஈசனைக் காண, ஆவல் வந்து விட்டது! கிளம்பி விட்டார் வடநாட்டுக்கு! சென்னையில் திருமயிலை, திருவான்மியூர், திருக்காளத்தி, திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) எல்லாம் கடந்து ஒரேயடியாக, வடக்கே காசி வரை வந்து விட்டார்! கூட வந்தவர்களால் முடியவில்லை! அப்பரின் மனமோ ஒடியவில்லை! அனைவருக்கும் விடைகொடுத்து விட்டு, தான் மட்டும் தனியாகக் கயிலை யாத்திரைக்கு நடக்கத் தொடங்கி விட்டார்!

    “பங்கயம் புரை தாள் பரட்டளவும், பசைத் தசை தேயவும் கைகளும் மணி பந்து அசைந்துறவே, கரைந்து சிதைந்து அருகவும், மார்பமும் தசை நைந்து, சிந்தி வரிந்த என்பு முரிந்திடவும், உடம்பு அடங்கவும், ஊன் கெடவும், சேர்வரும் பழுவம் புரண்டு புரண்டு செல்லவும்…”என்று ஓடாய்த் தேய்ந்தார் நாவுக்கரசர்!.கால்களால் நடக்க முடியாது, கைகளால் தவழ்ந்தார்! அதுவும் முடியாது, தலையால், உடலால் ஊர்ந்தார்! அதுவும் முடியாது, என்ன செய்வதென்றே தெரியவில்லை! கயிலை நாதனே முனிவராய் அப்பரை ஆற்றுப்படுத்த வந்து விட்டார்!

    “மானிடர்கள் உடலோடு திருக்கயிலாயம் சென்று ஈசனைக் காண்பது மிகவும் அரிது அப்பரே! உங்கள் தொண்டே போதும்! யாத்திரையைக் கைவிட்டு விடுங்கள்! – நாவுக்கு அரசர்! இப்போது செவிக்கும் அரசர் ஆகி விட்டார் போலும்! செவி மடுத்தாரில்லை! “அப்பரே, இப்படி ஒரு உறுதியா? கயிலை அடிவாரத்தில் வாழும் முனிவன் நான்! எனக்கே ஈசன் தரிசனம் அவ்வளவாகக் கிடைப்பதில்லை!”
    “அப்பரே, நான் திரிகால ஞானி! ஈசனே எம்மை உம்மிடம் அனுப்பி வைத்தார்! இதோ சூல-ரிஷப முத்திரை! இப்போதாவது நான் சொல்வதைக் கேட்பீர்களா? இதோ, இந்தத் தூய ஏரியில் மூழ்குங்கள்! பஞ்ச நதி க்ஷேத்திரம் என்னும் திரு-ஐ-ஆற்றில் (திருவையாறு) எழுவீர்கள்! அது தட்சிண கைலாசம்! அங்கு இறைவனைத் திருச்சபை சூழக் காண்பீர்கள்”..அப்பர் மானசரோவரத்தில் மூழ்கினார்! ஊன உடற் புண்கள் எல்லாம் மறைந்தன!

    உடல் சிவ மங்களமாய் மின்னியது! வட மலையில் மூழ்கியவர், தென் வயலில் எழுந்தார்! காயங்கள் உடலில் ஆறின! கானங்கள் வாயில் ஊறின! “மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன்! யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்! கண்டேன் அவர் திருப்பாதம்! கண்டறியாதன கண்டேன்!!” மும்மூர்த்திகளும் சூழ்ந்திருக்க, தேவரும், ஏவரும் துதிக்க, நடன மாதர் நடங்கள் புரிய, கங்கை முதலான ஆறுகள் வணங்க, நந்தி தேவர் திருக்கடைக்காப்பில் நிற்க, மின்னிடும் வெள்ளிப் பனி மலையாய் அம்மையும் அப்பனும்…அப்பருக்குத் திருக்கைலாயம் காட்சி ஆகிறது!

    பிரம்மா முதலிய தேவர்கள் வணங்கி நிற்கவும், திருமறைகள் முழங்கவும், எண்ணிறந்த சிவகணங்கள் போற்றவும், முனிவர், சித்தர், முத்தர் முதலானோர் நெருங்கி இருக்கவும், கங்கை முதலான நதிகள் துதிக்கவும், நந்தி தேவர் காவல் புரியவும், பவள மாமலை மேல் இறைவனும் அம்பிகையும் இனிது வீற்றிருந்து அருள் புரியும் பேரானந்தக் காட்சியைக் கண்டார். காணாததைக் கண்டார்.

    அப்பர் அடிகள் பேரின்ப நிலையில் ஆடினார்; பாடினார்; அழுதார்; தொழுதார்; ‘மாதர் பிறைக் கண்ணியானை’ என்னும் தீந்தமிழ்ப் பதிகம் பாடித் துதித்தார். இன்றும் திருவையாற்றுத் தலத்தில், ஆண்டு தோறும் ஆடி அமாவாசை அன்று ‘அப்பர் அடிகள் கயிலைத் தரிசனம் காணும் உற்சவம்’ நிகழ்த்தப் படுகிறது. இப்புனித நிகழ்வைத் தரிசிப்பது கயிலை மலையைத் தரிசித்த புண்ணியப் பலனை நல்கும்.

    திருவையாறில் கயிலைக் காட்சி கண்டு, பேரின்ப நிலையில் அப்பர் பெருமான் பாடியருளிய பதிகத்தின் முதல் பாடல்:

    மாதர்பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
    போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவேன்
    யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது
    காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்.
    கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்!!!

    புகுவார் பின் புகுந்தால், அடியார் பின் புகுந்தால், அன்பினால் புகுந்தால், அந்த அன்பே சிவமாகும்! அன்பர் கூடுமிடம் கயிலையாகும்!….அப்பர் திருவையாறில் கண்ட திருக்கைலாயம் தரிசனம் நாம் காண ஆடி அமாவாசை அன்று திருவையாறு சென்று வாருங்கள் ….

    “யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது” என்ற அப்பரின் திருவாக்கின்படி நாமும் இந்நாளில் திருவையாறில் திருக்கயிலைக் காட்சியைக் காண்போம். ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி சமேத அருள்மிகு ஸ்ரீ ஐயாறப்பர் அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளும் அந்த பக்திப்பரவசமான காட்சியை காணக் கண்கோடி வேண்டும்.

  • The Mahātmya of Tiruvānaikkā: A Saiva Siddhānta Perspective

    The Mahātmya of Tiruvānaikkā: A Saiva Siddhānta Perspective


    TaHiEnFrEs

    திருவானைக்கா திருத்தலப்பயன்:

    இத்தலம் அடைந்தவர்க்குத் தானம், தருமம், வேள்விபுரிதல் ஞானம், செபம், கல்வி, நன்மை, யோகம். மோனம், தீர்த்த மாடல், முத்திசாதனை முதலியன வேண்டா. இப் பதியை அடைவதே எல்லாப் பயனும் நல்கும் என்பர் தந்திவனப்புராண( திருவானைக்கா தலபுராண நூல்களில் ஒன்று) ஆசிரியரான கமலை ஸ்ரீ ஞானப்பிரகாசர்.

    “தானம்ஏன் தவம்ஏன் மிக்க தருமம்ஏன் வேள்வி தான்ஏன் ஞானம்ஏன் செபம்ஏன் கல்வி தன்மைஏன் யோகந் தான்ஏன் மோனம்ஏன் தீர்த்தந் தான்ஏன் முத்திசா தனைஏன் சுத்த ஞானமேன் மையினால் ஓங்கும் அப்பதி அடைந்து ளார்க்கே”
    (தலமகிமைச் சருக்கம் பா. 96)

    இத்தல புராணத்தினிடையே பல புராண வரலாறுகளையும் இணைத்துக் கூறுகிறார். திருஞானசம்பந்தப் பெருமான் சமணர் வரலாறு (200), சிவபெருமான் இந்திரன் வடிவில் வந்தது (287), திரிபுரம் எரித்தது (291), அமுதம் கடைந்தது (392) போன்ற பல செய்திகள் அமைந்துள்ளன.

  • The Role of Īśvara in the Universe: A Saiva Siddhānta Perspective

    The Role of Īśvara in the Universe: A Saiva Siddhānta Perspective


    TaHiEnFrEs

    முதல்வனாகிய சிவபெருமான் தொழில் புரிதலின் உருவுடையனாதல் வேண்டும். உடம்பின்றி வினைசெய்தல் கூடாது ஆதலினால்; என்பது பூருவ பக்கம்.

    அதற்கு விடை : தன் உடம்பை உயிர் உருவம் இன்றியே இயக்குகிறது; இறைவனும் அவ்வாறு உருவின்றி நின்றே தன் உருவமாகிய உலகைத் தொழிற்படுத்துதல் அமையும் என்பது. உலகமே இறைவனது உடம்பு. உலகத்தில் உள்ள சராசரங்கள் இறைவனுக்கு
    மெய் வாய் கண் போன்ற உறுப்புக்கள். உடம்புதோறும் உள்ள உயிர்கள் அறிவுப்பொறி போல்வன. முதல்வனது விழைவு, அறிவு, செயல் ஆற்றல்கள், மனம், புத்தி, ஆங்காரம் என்னும் அகக்கரணங்கள் போல்வன. இங்ஙனம் நின்று உயிர்களாகிய பொறிகளுக்கு முதல்வன் அறிவை விளக்கி அவற்றைச் செயற்படுத்துவன். இவ்வாறு முதல்வன் செய்துவரும் செயலுக்கு நுண்ணிய ஐந்தொழில் என்பது பெயர்.

    இதனைப் பின்வரும் சித்தியார் செய்யுள் எடுத்துக் கூறுகிறது:

    “உலகமே உருவ மாக யோனிகள் உறுப்ப தாக
    அலகுபே ரிச்சா ஞானக் கிரியையுட் கரண மாக
    அலகிலா உயிர்ப்பு லன்கட் கறிவினை யாக்கி ஐந்து
    நலமிகு தொழில்க ளோடும் நாடகம் நடிப்பன் நாதன் “

    இனிச் சிலர் பின்வருமாறு வினாவை எழுப்புவர்: குடத்தையும் அதனை வனையும் குயவனையும் ஓரிடத்து முன்கண்டவன் வேறிடத்தில் குடத்தை மட்டும் காண்பனாயின், இக்குடத்தை வனைவதற்கு ஒரு வினைமுதல் இருத்தல் வேண்டும் எனக் கருதி உணர்வன். ஆனால் உலகத்தையும் உலகத்தைப் படைத்த இறைவனையும் ஒருவன் முன்னர் எப்பொழுதும் ஒருங்கே கண்டதில்லை. ஆதலினால், உலகத்தை மட்டும் கண்டு, அதனை ஆக்கியோன் ஒருவன் உளன் என்பது எவ்வாறு கருதல் அளவையாகும்? என்பது பூருவ பக்கம்.

    அதற்கு விடை : சமையலறையில் புகையினையும் அதன் காரணமான தீயினையும் ஒருங்கே கண்டவன் மற்றொரு சமையலறையில் புகை மாத்திரம் காணும்போது அங்குத் தீயும் உண்டென மனத்துத் துணிதல் கூடும். மலைமேல் புகையைமட்டுங் கண்டு அங்குத் தீ உண்டு என்பதைச் சமையல் அறையில் கண்ட புகையை எடுத்துக்காட்டித்
    துணிதல் கூடுமா? எனின், கூடாது எனல் வேண்டும். ஏனென்றால் சிறிதாகிய சமையற் புகைக்குப் பெரிதாகிய மலையிற் புகை வேறு பாடுடையது. ஆனால் மலையிற் புகையைக் கண்டு அங்குத் தீ உண்டு என்னும் துணிபு நிகழும் என்பதே தலையாய அறிவினார் கொள்கை. ஆண்டுத் துணிபு நிகழாது என்போன் அனுமானத்தைப் பிரமாணமாகக் கொண்டோன் அல்லன். இரண்டு புகைகளுக்கும் வேறுபாடு உண்டேனும், புகை என்னும் பொதுமைபற்றி அங்கே துணிவு நிகழும் என்பது கருத்தாயின், உலகத்தினிடத்தும் அது பொருந்தும். எவ்வாறெனின், செயப்படு பொருளையும், செயலையும், செய்வோனையும் ஒருங்குடன் கண்டு வந்தவன், பிறிதோரிடத்துச் செயப்படுபொருளை மாத்திரம் காண்பானாயின், காரியமாதற் பொதுமைபற்றி, அதுவும் செய்வோனை உடைத்து என்று துணிதல் பொருத்தமே ஆகும்.

    சிவஞானபாடியத் திறவு (1977) என்னும் நூலில் சைவத்திரு க. வச்சிரவேல் முதலியார் அவர்கள்.

  • An Examination of the Padana and Bheda Schools of Saivam

    An Examination of the Padana and Bheda Schools of Saivam


    TaHiEnFrEs

    ஆணவந்தான் அநாதிஅந்த மடையா தாகும்
    அடையின்அந்த ஆன்மாவும் அழியுமெனிற் செம்பிற்
    காணலுறுங் களிம்பிரத குளிகைபரி சிக்கக்
    கழியுஞ்செம் புருநிற்கக் கண்டோ மன்றே
    தாணுவின்தன் கழலணையத் தவிரும்மலந் தவிர்ந்தால்
    தான்சுத்த னாயிருக்கை முத்திஅரன் தாளைப்
    பூணவேண் டுவதொன்று மில்லையெனின் அருக்கன்
    புகுதஇருள் போம்அடியிற் பொருந்தமலம் போமே

    சிவஞான சித்தியார்.

    (கொ-டு) இரத குளிகை பரிசிக்கச் செம்பில் காணலுறு களிம்பு கழியும் எனவும், மலம் தவிரும் எனவும், பொருந்தவே மலம் போம் எனவுங் கூட்டுக.

    (பொ-ரை.) முற்கூறிய ஆணவமலம் அநாதி நித்தமாதலால், முத்தியில் அது அழிவதில்லை. அழியுமாயின், அநாதி
    நித்தமாகிய ஆன்மாவும் அழியுமெனப்பட்டு இரு பொருளும் நித்தமென்பது இழுக்காய் முடியும். ஆதலின், முத்தி நிலையினும் சகசமாகிய ஆணவமலம் நீங்குமாறில்லை என்பர் பாடாணவாதசைவர்.

    மலத்தோடு கூடி அறியாமையாய் அடங்கியிருத்தலின் பாடாணவாதியெனப் பட்டார். பாடாணம் என்பது கல். அநாதியாகிய செம்பினிடத்து அநாதியாயுள்ள களிம்பு இரதகுளிகை பரிசித்த மாத்திரத்தில் நீங்கி அச் செம்பு பொன்னுருவாய் நிற்கக் காண்பது போல், இறைவன்றிருவடியாகிய மெய்ஞ்ஞானஞ் சார்ந்த மாத்திரையே உயிரோடு சகசமாய் நின்ற ஆணவமலம் நசிக்கும்; நசிக்கவே உயிர் ஆணவமலத்தின் வேறாய்ச் சிவமாய் நிற்றற்கு இழுக்கில்லையாதலின் அப்பாடாணவாத சைவர் மதம் பொருந்தாது.

    இனி மலம் நீங்கப் பெற்ற மாத்திரையே மெய்ஞ்ஞானம் சாரும். அதுவேமுத்தி; மலம் நீங்கியதன் மேலும் திருவடியடைதல் வேண்டா மென்பர் பேதவாத சைவர். இவர் சிவனோடு கலவாமையின் பேதவாதி எனப்பட்டார். இருள் நீங்கிச் சூரியனொளி பிரகாசித்த விடத்தும் சூரியனொளியோடு கண்ணொளி கலந்தால் இருள் நீங்கும். கலவாது இமைகளால் மூடப் பெற்றிருப்பின் கண்ணுக்கு இருள் நீங்காதவாறு போல, ஆன்மாவின் அறிவுக்கு மெய்ஞ்ஞானம் பிரகாசித்து ஆன்மா இறைவனுடன் கலந்தால் மலம் பற்றறக் கழியும். இன்றேல் ஆன்மாவினிடத்து மலம்‌ பற்றறக்‌ கழியாது: ஆதலால்‌, அப்‌ பேதவாத சைவர்‌ மதமும்‌ பொருந்தாது. (எ-று)

    சிவஶ்ரீ அருணந்தி சிவாசாரியர் அருளிச்செய்த சிவஞானசித்தியார் சுபக்கம் மூலமும்,உரையும்(1926) என்னும் நூலில் இருந்து…

    (இதற்கு திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்துத் திராவிட மாபாடிய கர்த்தராகிய மாதவச் சிவஞானயோகிகள் அருளிய உரையைத் தழுவி, திருவாவடுதுறை ஆதீன சைவப் பிரசாரகரும் தேவகோட்டை சிவாகம சித்தாந்த பரிபாலன சங்கத்துச் சித்தாந்த சாத்திர போதகருமாகிய,தூத்துக்குடி பொ.முத்தைய பிள்ளை எழுதிய பொழிப்புரை)

  • Saiva Samaya Veda Nirūpaṇam: An Exposition of Vedic Legacy in Saivam

    Saiva Samaya Veda Nirūpaṇam: An Exposition of Vedic Legacy in Saivam


    TaHiEnFrEs

    தேவாரத்‌ திருமுறைகளில்‌ பாடப்பட்டுள்ள வேதங்கள்‌ இருக்காதி வேதங்களே என்பதை எடுத்துக்கூறி நிரூபணம்‌ செய்யும்‌ வகையில்‌ திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை சார்ந்த சைவப்பெரியோர்‌ மா. சாம்பசிவம்‌ பிள்ளை அவர்கள்‌ தமது தள்ளாத 80 வயதில்‌ சைவமரபின்‌ மீதுகொண்ட அதீதப்பற்றின்‌ காரணமாக 1926-ஆம்‌ ஆண்டு “திருநான்மறை விளக்க ஆராய்ச்சி” என்ற நூலை எழுதி வெளியிட்டார்கள்‌.

    இந்நூலுக்காக அக்காலத்தில்‌ தமிழகத்திலும்‌ ஈழத்திலும்‌ இருபத்தியேழு சைவப்பெரியோர்களிடம்‌ வித்வத்‌ அபிப்ராயம்‌ பெற்று முகவுரையாக வெளியிட்டார்கள்‌. இவை அனைத்தும்‌ ஒரு தனிநூலாக வரும்‌ அளவிற்கு உயர்‌ சிந்தனை கொண்டவை.

    அவ்வாறு பெற்ற வித்வத்‌ அபிப்ராயத்தில்‌ யாழ்ப்பாணம்‌ ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத பண்டிதர்‌ அவர்கள்‌ கட்டுரையும்‌ ஒன்று. இக்கட்டுரையே குருவருள்‌ திருவருள்‌ துணைக்கொண்டு இப்பொழுது ‘சைவசமய வேதநிரூபணம்’ நூலாக வெளிவருகின்றது.

    ஸ்ரீசுவாமிநாத பண்டிதர்‌ அவர்களின்‌ இக்கட்டுரை சைவசமயத்தவர்‌ அனைவரும்‌ படித்து பயன்பெற வேண்டிய ஒன்றாகும்‌.

    மூலநூலாகிய சிவத்திரு மா. சாம்பசிவம்‌ பிள்ளை இயற்றிய திருநான்மறை விளக்க ஆராய்ச்சி புத்தகம்‌ சைவசமயத்திற்கு ஓர்‌ உன்னத வரப்பிரசாதமாகும்‌. இந்நூல்‌ சைவசமயத்திற்கு ஒரு கவசமாக திகழ்ந்தது என்றால்‌ அது மிகையல்ல. உத்தமோத்தமர்‌ மா. சாம்பசிவம்‌ பிள்ளை அவர்களை என்றென்றும்‌ நினைவில்‌ நிறுத்தி போற்றவேண்டியது சைவசமயத்தவரின்‌ தலையாய கடமையாகும்‌.

    சைவசமய வேதநிரூபணம் என்னும் பெயரில் வெளிவந்த இந்நூலானது
    திருச்சிராப்பள்ளி
    ஶ்ரீ மா. சாம்பசிவம் பிள்ளையவர்கள்
    இயற்றிய
    ‘திருநான்மறைவிளக்க ஆராய்ச்சி’ நூலின்
    வித்துவப் பெரியார் அபிப்ப்ராயம்
    பகுதியிலிருந்து எடுத்தாளப்பட்டது,

    வழங்கியோர் – யாழ்ப்பாணம்
    ஶ்ரீலஶ்ரீ சுவாமிநாத பண்டிதரவர்கள்,

    மறுபதிப்பும் – வெளியீடும்:
    ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம்,
    கள்ளகுறிச்சி – 606202.

    देवारा तिरुमुरैगाल में वर्णित वेद ऋग्वेद आदि वेद ही हैं, इसे स्पष्ट करने और प्रमाणित करने के लिए तिरुचिरापल्ली मलाईकोट्टई से संबद्ध शैव प्रमुख मा. साम्बासिवम पिल्लै जी ने अपनी 80 वर्ष की आयु में शैव परंपरा के प्रति अपनी अत्यधिक भक्ति के कारण 1926 में “तिरुनान्मरै विलक्का आराय्च्चि” नामक पुस्तक लिखी और प्रकाशित की।

    इस पुस्तक के लिए उस समय तमिलनाडु और ईलम में 27 शैव प्रमुखों से विद्वानों की राय प्राप्त की गई और उन्हें प्रस्तावना के रूप में प्रकाशित किया गया। ये सभी उच्च विचारों से भरे हुए हैं और एक अलग पुस्तक के रूप में आने के योग्य हैं।

    ऐसी ही एक विद्वानों की राय याल्पपानम श्रीलश्री स्वामीनाथ पंडित जी की है, जो इस पुस्तक “सैवसमय वेदनिरूपणम” के रूप में अब प्रकाशित हो रही है।

    श्री स्वामीनाथ पंडित जी का यह लेख सभी शैव समुदाय के लोगों के लिए पढ़ने और लाभ उठाने के लिए अत्यंत महत्वपूर्ण है।

    मूल पुस्तक “तिरुनान्मरै विलक्का आराय्च्चि” शैव समुदाय के लिए एक महान वरदान है। यह पुस्तक शैव समुदाय के लिए एक कवच के रूप में कार्य करती है, और यह कहना अतिशयोक्ति नहीं होगी। उत्तमोत्तम मा. साम्बासिवम पिल्लै जी को हमेशा याद रखना और उनकी पूजा करना शैव समुदाय की प्रमुख जिम्मेदारी है।

    “सैवसमय वेदनिरूपणम” नामक यह पुस्तक तिरुचिरापल्ली श्री मा. साम्बासिवम पिल्लै जी द्वारा रचित “तिरुनान्मरै विलक्का आराय्च्चि” पुस्तक के विद्वान पंडितों की राय वाले भाग से ली गई है। इसे प्रदान करने वाले याल्पपानम श्रीलश्री स्वामीनाथ पंडित जी हैं। पुनर्मुद्रण और प्रकाशन: आदिसैवर नलवाझ्वु मैयम, कल्लाकुरिची – 606202।

    The Vedas mentioned in the Dēvāra Tirumurugai are indeed the R̥gveda and other Vedas. To clarify and prove this, Śrī Mā. Cāmpacivam Piḷḷai, a prominent Śaivite from Tiruccirāppaḷḷi Malaikōṭṭai, wrote and published the book “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” in 1926 at the age of 80, driven by his deep devotion to the Śaivite tradition.

    This book features endorsements from 27 Śaivite scholars from Tamil Nadu and Eelam, which were obtained and published as a preface. These endorsements are filled with high thoughts and are worthy of being published as a separate book.

    One such scholarly endorsement is from Yāḷppāṇam Śrīlaśrī Svāminātha Paṇḍitar, which is now being published as the book “Saiva Samaya Veda Nirūpaṇam”. Śrī Svāminātha Paṇḍitar’s article is extremely important for all Śaivites to read and benefit from.

    The original book “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” is a great boon to the Śaivite community. It serves as a shield for the community, and it’s not an exaggeration to say so.

    Remembering and honouring the great Śrī Mā. Cāmpacivam Piḷḷai is a primary responsibility of the Śaivite community.

    The book “Saiva Samaya Veda Nirūpaṇam” is extracted from the scholarly endorsements section of Śrī Mā. Cāmpacivam Piḷḷai’s book “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi”. It was provided by Yāḷppāṇam Śrīlaśrī Svāminātha Paṇḍitar.

    Republished and distributed by: Ādisaivara Nalavāzhvu Maiyam, Kallakurichi – 606202.

    Les Védas mentionnés dans les Dēvāra Tirumurugai sont bien le R̥gveda et les autres Védas. Pour clarifier et prouver cela, Śrī Mā. Cāmpacivam Piḷḷai, un éminent Śaivite de Tiruccirāppaḷḷi Malaikōṭṭai, a écrit et publié le livre “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” en 1926 à l’âge de 80 ans, poussé par sa profonde dévotion à la tradition Śaivite.

    Ce livre présente des approbations de 27 érudits Śaivites du Tamil Nadu et de l’Eelam, qui ont été obtenues et publiées en préface. Ces approbations sont remplies de pensées élevées et valent la peine d’être publiées dans un livre séparé.

    L’une de ces approbations savantes est celle de Yāḷppāṇam Śrīlaśrī Svāminātha Paṇḍitar, qui est maintenant publiée sous le titre “Saiva Samaya Veda Nirūpaṇam”. L’article de Śrī Svāminātha Paṇḍitar est extrêmement important pour tous les Śaivites à lire et à en tirer profit.

    Le livre original “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” est un grand bienfait pour la communauté Śaivite. Il sert de bouclier pour la communauté, et ce n’est pas une exagération de le dire.

    Se souvenir et honorer le grand Śrī Mā. Cāmpacivam Piḷḷai est une responsabilité première de la communauté Śaivite.

    Le livre “Saiva Samaya Veda Nirūpaṇam” est extrait de la section des approbations savantes du livre “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” de Śrī Mā. Cāmpacivam Piḷḷai. Il a été fourni par Yāḷppāṇam Śrīlaśrī Svāminātha Paṇḍitar.

    Réédité et distribué par : Ādisaivara Nalavāzhvu Maiyam, Kallakurichi – 606202.

    Los Vedas mencionados en los Dēvāra Tirumurugai son efectivamente el R̥gveda y otros Vedas. Para aclarar y demostrar esto, Śrī Mā. Cāmpacivam Piḷḷai, un destacado Śaivita de Tiruccirāppaḷḷi Malaikōṭṭai, escribió y publicó el libro “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” en 1926 a la edad de 80 años, impulsado por su profunda devoción a la tradición Śaivita.

    Este libro presenta aprobaciones de 27 eruditos Śaivitas de Tamil Nadu y Eelam, que se obtuvieron y publicaron como prefacio. Estas aprobaciones están llenas de pensamientos elevados y merecen ser publicadas en un libro separado.

    Una de estas aprobaciones eruditas es la de Yāḷppāṇam Śrīlaśrī Svāminātha Paṇḍitar, que ahora se publica bajo el título “Saiva Samaya Veda Nirūpaṇam”. El artículo de Śrī Svāminātha Paṇḍitar es extremadamente importante para que todos los Śaivitas lo lean y se beneficien.

    El libro original “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” es un gran beneficio para la comunidad Śaivita. Sirve como un escudo para la comunidad, y no es una exageración decirlo.

    Recordar y honrar al gran Śrī Mā. Cāmpacivam Piḷḷai es una responsabilidad principal de la comunidad Śaivita.

    El libro “Saiva Samaya Veda Nirūpaṇam” se extrae de la sección de aprobaciones eruditas del libro “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” de Śrī Mā. Cāmpacivam Piḷḷai. Fue proporcionado por Yāḷppāṇam Śrīlaśrī Svāminātha Paṇḍitar.

    Reeditado y distribuido por: Ādisaivara Nalavāzhvu Maiyam, Kallakurichi – 606202.

    Reading : https://archive.org/details/saiva-samaya-vedanirupanam