Tag: திருமுறைப்

  • Adiyār Vyākaraṇa

    Adiyār Vyākaraṇa


    TaHiEnFrEs

    அடியார் இலக்கணம்

    நைமிசாரண்ய முநிவர்கள் பத்தர்களுடைய இலக்கணம் எது என்று கேட்கச் ஶூதமுநிவர் கூறுகின்றார் : – தேவர் , அசுரர் , அரக்கர் , இயக்கர் கந்தருவர் , நாகர் , முநிவர் , நரர் ஆகிய எவ்வகையருள்ளும் அடியார்கள் உண்டு . அடியார்களுக்குள் வருணாச்சிரம பேதம் கிடையாது ; யாவரும் மாகேசுரர் .

    அடியார்களது அகத்துள் விளங்கும் இலக்கணம் மூன்று – அவைதாம்
    (i ) மானத ஜபம் ,
    ( ii ) மானத சிவபூஜை
    ( iii ) உள்ளத்தே பரம்பொருள் தோற்றமளித்தல் .

    புறத்தே தோன்றும் இலக்கணம் பத்து அவைதாம். :
    ( 1 ) கண்டம் தழுதழுத்தல் , (2 ) நா அசைதல்
    ( 3 ) இதழ் துடித்தல்
    ( 4 ) நடுக்கமுறல்
    ( 5 ) மயிர் பொடித்தல்
    ( 6 ) அங்கம் வெதும்பி வியர்த்தல்
    ( 7 ) தள்ளாடி வீழ்தல்
    ( 8 ) கண்ணீர் சொரிதல்
    ( 9 ) இரங்குதல்
    ( 10 ) ஆர்வத்தால் பரவசப்படுதல் .

    இத்தகைய அடியார்கள் புண்ணியர்கள் ; வீடுபேறு பெறுவார்கள் ;

    திருநீறும் கண்டிகையும் புனைந்தவர்களிடம் மேற்சொன்ன இலக்கணங்கள் இல்லாவிடினும் , அவர்களைக் கண்டால் அவர்களை வீழ்ந்து வணங்கி உபசார மொழிகளைக் கூறவேண்டும் . சிவாசாரியர்களையும் சிவனடியர்களையும் பணிந்தேத்துபவர் யாராயிருந்தாலும் நோயற்று மக்களுடன் உலகில் பல்லாண்டு வாழ்வர் ; சகல தேவர்களாலும் உபசரிக்கப்பட்டு சிவலோகம் மருவி ஈற்றில் சிவனடி கூடுவர் . சிவபுண்ணியத்தின் மேன்மை யெல்லாம் தேவிக்குச் சிவபிரான் முன்னொரு காலத்தில் கூறியருளினர் . அதிபக்குவர்க்கே சிவபுண்ணியத்தின் மேன்மையைக் கூறலாகும் . சிவபிரான் தேவியின் பொருட்டு உரைத்தது இது என்றால் தமியேனாற் கூற முடியுமோ ?

    திரு ஞானவரோதய பண்டாரம் இயற்றிய உபதேச காண்டம்(1950) என்னும் நூலில் இருந்து…

    இப்பதிவினை யூடியூபில் கேட்டு இன்புற…

    अडियार व्याकरण

    Adiyar Vyākaraṇa – Dimensions and Analysis of Sivan Adiyars

    Adyar Vyākaraṇa – Dimensions et analyse de Sivanadiyar

    Adyar Vyākaraṇa – Dimensiones y análisis de Sivanadiyar

  • The Glory of ṭirumurai

    The Glory of ṭirumurai


    TaHiEnFrEs

    திருமுறைப் பெருமை

    திருமுறைகள் ஸ்ரீ ஆளுடைய பிள்ளையார் முதல் ஸ்ரீ அருண்மொழித் தேவர் இறுதியாயுள்ள நாயன்மாராற் கூறி அருளப்பட்டனவேனும், ஸ்ரீ சதாசிவமூர்த்தி பால் நின்று இருக்கு முதலிய வேதங்கள் நான்கையும் காமிகம் முதலிய இருபத்தெட்டு ஆகமங்களையும் தோற்றுவித்தாற் போல, சிவபிரானே அவ்வாளுடைய பிள்ளையார் முதலாயினார் பால் அதிட்டித்து நின்று அத்திருமுறைகளைத் தோற்றுவித்தலான், அவை சிவபிரானால் இயற்றி அருளப்பட்டனவேயாம் என்க. பேயினால் பிடிக்கப்பட்டான் வாய்ச்சொற்கள் எல்லாம் பேயின் சொற்களே யாமன்றி அவன் சொற்கள் ஆகாதவாறு போலச் சிவபிரானால் அதிட்டிக்கப்பட்ட நாயன்மார் வாய்ச்சொற்களாகிய திருமுறைகள் எல்லாம் அச்சிவபிரான் சொற்களே.இதனை,

    “எனதுரை தனதுரை யாக நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்” என ஆளுடைய பிள்ளையார் அருளிச் செய்தவாற்றானும் உணர்க.

    சிவபிரானுக்கு மந்திரம் தூலசரீரமும் ஆன்மா சூக்கும சரீரமும் சத்தி அதிசூக்கும சரீரமுமாம் எனச் சிவாகமங்கள் ஓதுதலால், அம்மந்திர சொரூபமாகிய வேதங்களின் கண்ணும்,அவற்றின் வேறாகத திருமுறைகளின் கண்ணும் சிவபிரான் விசேட சாந்நித்யம் உற்றிருப்பார் என்க.

    யாழ்ப்பாணத்து வண்ணைநகர் ஸ்ரீ சுவாமிநாத பண்டிதர் இயற்றிய திருமுறைப் பெருமை(1911) என்னும் நூலில் இருந்து…

    तिरुमुराई की महिमा

    The Glory of Tirumurai

    la gloire de Tirumurai

    la gloria de Tirumurai