Category: Meykanda Sastras

  • The Various Epithets of Rajaraja Chozhan

    The Various Epithets of Rajaraja Chozhan


    TaHiEnFrEs

    திரு இராஜராஜ சோழ மாமன்னரின் மெய்க்கீர்த்தி

    திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் கலமறுத் தருளி வேங்கை நாடுங் கங்க பாடியும் தடிகை பாடியும் நுளம்ப பாடியும் குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும் முரட்டெழிற் சிங்களர் ஈழமண்டலமும் இரட்ட பாடி யேழரை யிலக்கமும் முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமுந் தெண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன் னெழில்வள ரூழியு ளெலலா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் கோராசகேசரி வர்மன்

    காந்தலூர் கொண்டான், அழகிய அழகிய சோழன், மும்முடிச்சோழன்ராஜசர்வக்ஞன், சோழநாராயணன், அபயகுலசேகரன், அரித்துர்க்கலங்கன், அருள் மொழி, ரணமுகபீமன், ரவி வம்சசிகாமணி, ராஜ பாண்டியன், ராஜ கேசரிவர்மன், சோழேந்திர சிம்மன், ராஜ மார்த்தாண்டன், ராஜேந்திர சிம்மன், ராஜவிநோதன், உத்தமசோழன், உத்துக துங்கன், உய்யக் கொண்டான், உலகளந்தான், கேரளாந்தகன், சண்ட பராக்கிரமன், சத்ருபுஜங்கன், சிங்களாந்தகன், சிவபாத சேகரன், சோழகுலசுந்தரன், சோழ மார்த்தாண்டன், திருமுறைகண்ட சோழன், ஜன நாதன், ஜெயகொண்ட சோழன், தெலிங்க குலகாலன், நித்ய விநோதன், பண்டிதசோழன், பாண்டிய ககுலாசனி பெரிய பெருமாள், மூர்த்தி விக்கிரமா பரணன், சத்திரிய சிகாமணி, கீர்த்தி பராக்கிரமன்,உடையார் ஸ்ரீராஜராஜ சோழன் ஐப்பசி சதய நன்னாள்.

    Transliteration :

    Tirumakaḷ pōlap perunilac celviyum taṉakkē yurimai pūṇṭamai maṉakkoḷak kāntaḷūrc cālaik kalamaṟut taruḷi vēṅkai nāṭuṅ kaṅka pāṭiyum taṭikai pāṭiyum nuḷampa pāṭiyum kuṭamalai nāṭuṅ kollamuṅ kaliṅkamum muraṭṭeḻiṟ ciṅkaḷar īḻamaṇṭalamum iraṭṭa pāṭi yēḻarai yilakkamum munnīrp paḻantīvu paṉṉīrāyiramun teṇṭiṟal veṉṟit taṇṭāṟ koṇṭataṉ ṉeḻilvaḷa rūḻiyu ḷelalā yāṇṭun toḻutaka viḷaṅkum yāṇṭē ceḻiyarait tēcukoḷ kōrācakēcari varmaṉ

    kāntalūr koṇṭāṉ, aḻakiya aḻakiya cōḻaṉ, mum’muṭiccōḻaṉrājacarvakñaṉ, cōḻanārāyaṇaṉ, apayakulacēkaraṉ, aritturkkalaṅkaṉ, aruḷ moḻi, raṇamukapīmaṉ, ravi vamcacikāmaṇi, rāja pāṇṭiyaṉ, rāja kēcarivarmaṉ, cōḻēntira cim’maṉ, rāja mārttāṇṭaṉ, rājēntira cim’maṉ, rājavinōtaṉ, uttamacōḻaṉ, uttuka tuṅkaṉ, uyyak koṇṭāṉ, ulakaḷantāṉ, kēraḷāntakaṉ, caṇṭa parākkiramaṉ, catrupujaṅkaṉ, ciṅkaḷāntakaṉ, civapāta cēkaraṉ, cōḻakulacuntaraṉ, cōḻa mārttāṇṭaṉ, tirumuṟaikaṇṭa cōḻaṉ, jaṉa nātaṉ, jeyakoṇṭa cōḻaṉ, teliṅka kulakālaṉ, nitya vinōtaṉ, paṇṭitacōḻaṉ, pāṇṭiya kakulācaṉi periya perumāḷ, mūrtti vikkiramā paraṇaṉ, cattiriya cikāmaṇi, kīrtti parākkiramaṉ,uṭaiyār srīrājarāja cōḻaṉ aippaci cataya naṉṉāḷ.


  • Explanation of Siva Pujai

    Explanation of Siva Pujai


    TaHiEnFrEs

    “சிவனெனு நாமந் தனக்கே யுடையசெம் மேனியெம்மான்
    அவனெனை யாட்கொண் டளித்திடு மாகி லவன்றனையான்
    பவனெனு நாமம் பிடித்துத் திரிந்துபன் னாளழைத்தால்
    இவனெனைப் பன்னா ளழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே.”

    திருமுறை 4, பதிகம் 112 பொது, பாடல் எண் : 9 : திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம்.
    our Lord who has a red body and has the name of Civaṉ to denote himself only.
    it such a great god admits me as his protege and protects me.
    if I invoke him for many days catching hold of him by his name pavaṉ wandering wherever he goes.
    he will definitely appear before me thinking this fellow will not cease invoking me for many days.
    Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

    சிவ என்னும் பதம் சி-வ-எனப்பிரிந்து, சிகாரம் பதியட்சரமாகவும், வகாரம் பரையட்சரமாகவும் பெயர்பெற்று, சூரியனும் ஒளியும்போலவிளங்கும்.

    பிறவியையும் மலத்தையும் நீக்கி மோட்சத்தைத்தரும்
    படிநினைத்துச் சிவசத்திகளிடத்தில் உடல் பொருளாவியை
    ஒப்பித்தலே சிவபூசை என்பதன் கருத்தாகும்.
    அதற்கு மந்திரமும் கிரியையும் பாவனையும் வேண்டப்படும். மந்திரமும் முத்திரையும் கிரியையின் கருத்து இது என்பதை விளக்கும். ஒவ்வொருகிரியையிலும் எய்தற்பாலனவாகி யபலன் இவை என்பதை மனதால் நினைப்பது பாவனையாகும்.

    ஆகையால் மனம், வாக்கு, காயமென்னும் மூன்றும் ஒருமித்து மெய்யன்போடு கிரியை செய்தல் வேண்டும். அவை வெவ்
    வேறு வழிப்பட அன்பின்றிச் செய்யுங் கிரியையாற் பயனிலவாம்.

    “கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை
    ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
    ஓடு நீரினை யோட்டைக் குடத்தட்டி
    மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே.”

    திருமுறை 5, பதிகம் 99 பொது, பாடல் எண் : 9 : திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம்.
    if one has no love towards Araṉ, even if one bathes plunging into crores of holy waters with intention.
    it is like the foolish act of the obstinate person who pours water that has the nature of flowing, into a pot of holes and keeping it safe by covering it with a lid.
    Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

    சிவபூசை விளக்கம்(1928)
    என்னும் நூலில் அச்சுவேலி ச.குமாரசுவாமிக் குருக்கள்.

  • Saiva Siddhantham –A brief description

    Saiva Siddhantham –A brief description


    TaHiEnFrEs

    சைவ சித்தாந்தம் – சுருக்கமான விளக்கம்

    1. உடலுக்கு வேறாக உயிர் என ஒரு பொருள் உண்டு.
    2. அந்த உயிருக்கு உள்ளாக இறைவன் என்னும் மற்றொரு
      பொருள் உண்டு.
    3. உயிர்ப்பொருள், உள்ளிருக்கும் இறைவன் உணர்த்துதல்
      வழியாகத்தான் தனது உடற் கருவிகளை இயக்கிக்
      கொண்டு இவ்வுலகில் வாழ்கிறது.
    4. உயிரின் உலகியல் வாழ்வுக்கு உடந்தையாக ஆணவம்,
      கன்மம், மாயை என்ற மும்மலங்கள் உள்ளன.
    5. திருவருளால் இவற்றைச் சார்ந்து உயிர்வாழும் கட்டம்
      அவ்வளவும் பந்த நிலை அல்லது பெத்த நிலை.
    6. திருவருளால் இவற்றின் தொடர்பு நீங்கிச் சூக்கும
      உணர்வாகிய ஞான உணர்வினால் கடவுளை அறிந்து
      அடைந்து அனுபவிக்கும் நிலை மோட்ச நிலை அல்லது சுத்த நிலை.
    7. இச்சுத்த நிலைப்பேறு ஒவ்வோருயிர்க்கும் உரியது. ஆனால்,
      அதனதன் பக்குவ காலத்தில் மட்டும் அதற்கதற்கு வாய்ப்பது.
    8. இவ்வகையிற் சம்பந்தப்படும் பொருள்கள் மூன்று. அவை
      பதி, பசு, பாசம் என்பன.
    9. இம் முப்பொருள் இயல்புகளை உரிய முறையிற்
      கற்றுக் கேட்டுத் தெளிபவர்களே மெய்ஞ்ஞானம் பெறுவர்.
      அவர்களே மேல்கதிக்கும் வீடு பேற்றிற்கும் உரியர்.
    10. வீடு பேறு என்பது உயிர் தன் சீவத்தன்மை கழிந்து
      சிவத்தோடு ஏகரசமாய் நின்று அநுபவிக்கும் ஆராத ஒரு
      பேரின்ப நிலை.

    இவையும்‌ இவற்றின்‌ உள்‌ விரிவுகளுமே சைவசித்தாந்தம்‌ கூறும்‌ விஷயங்கள்‌. இவற்றை அறிவதன்‌ மூலம்‌ ஒருவன்‌ தன்னை அறிந்தவன்‌ ஆவான்‌. தன்னை அறியும்‌ அறிவும்‌ தலைவனாகிய இறைவனை அறிதலோடேயே நிகழும்‌. இந்த அறிவு நிலையே அறிவுக்கெல்லாம்‌ உயர்நிலை அறிவாகும்‌. இந்த அறிவு நிலையை எட்டாவிடில்‌ அறிவுக்குப்‌ பயன்‌ எதுவுமில்லை.

    “கற்றதனாலாய பயனென்‌” என்ற செய்யுளின்‌ மூலம்‌ இக்கருத்து திருக்குறளில்‌ முத்திரீகரணம்‌ (முத்திரையிடல் ) செய்யப்பட்டிருக்கிறது.

    சித்தாந்தச் செழும் புதையல்கள் என்னும் நூலில் பண்டிதர் மு.கந்தையா அவர்கள்.

  • The Greatness of Siva Pujai

    The Greatness of Siva Pujai


    TaHiEnFrEs

    சிவ பூஜை மான்மியம்

    விண்ணவர் , முநிவர் , எவ்வெத் தலங்களிற் சிவபெருமானை உமையுடன் வழிபட்டனர் , எங்களுக்கு உணர்த்தியருளுக என முநிவர்கள் கேட்கச் ஶூதமாமுனிவர் கூறுகின்றார் .

    திருமால் : – காசியிற் சிவனைப் பூசித்துக் காத்தல் தொழிலும் , ஐந்தாயுதமும் , திருமகளும் , கருடவாகனமும் பின்னும் பல வரங்களும் அளிக்கப் பெற்றார் . சிவலோகத்தின் கீழே வைணவபதத்தில் இருக்கப் பெற்றார் .

    பிரமன் : – காஞ்சியிற் பிஞ்ஞகனை வழிபட்டுப் படைத்தல் தொழிலும் கலைமகளும் , அன்னவாகனம் முதலியவும் தரப்பெற்று வைணவபதத்தின் கீழ் இருக்கப் பெற்றான் . அந்த இடம் பிரமலோகம் எனப்படும் .


    இந்திரன் : –ஸ்ரீ சைலத்தில் ஈசனை அருச்சித்து வானுலக ஆட்சியும் , புலோமிசை( இந்திராணி ) யும் , ஐராவதமும் , உச்சைச்சிரவமும் , குலிசப்படையும் , கற்பகத்தருவும் , காமதேனுவும் , சிந்தாமணியும் , கீழ்த்திசையரசும் கிடைக்கப் பெற்றான் .

    அக்கினி : – அண்ணாமலையில் அண்ணலைப் பூசித்து அக்கினிகளுக்கு அரசும் , சுவாஹா தேவியும் , ஆட்டுவாகனமும் , சத்திப்படையும் , தென்கீழ்த் திசை அரசும் பெற்றான் ,

    இயமன் : – கேதாரத்தில் எம்பெருமானை வழிபட்டுத் தண்டமும் , எருமைக் கடா வாகனமும் , நடுவன் என்ற நிலையும் பெற்றுத் தென்றிசைக்குத் தலைவனானான் : மற்றும் சுவர்க்கத்துக்கும் நரகத்துக்கும் புகவேண்டிய உயிர்களின் புண்ணிய பாவம் அறிந்து கூறும் சபையினரையும் , கதிரவன் முதலான உயிர்கள் புரியும் கருமத்தை அறிந்துரைக்கப் பதினான்கு எழுத்தாளர்களுக்குத் தலைமை பூண்ட சித்திரகுத்தனையும் பெற்றான்.

    நிருதி : -நிருதி கோகரணத்தில் நீலகண்டரைப் பூசித்து வாளும் , அரக்கர் சேனையும் பெற்றுத் தென்மேற்குத் திசைக்குத் தலைமை கொண்டான் .

    வருணன் : – திருவானைக்காவில் வள்ளலை வழிபட்டு மகரமீன் வாகனமும் , பாசம் முதலிய படைகளும் , கடலரசும் மேற்றிசைத் தலைமையும் பெற்றான் .

    வாயு :
    வாயு காளத்தியில் மங்கைப்பாகனைப் பூசித்துக் காற்றின் தலைமையும் , பல படைகளும் , வடமேற்குத் திசை அரசும் பெற்றான் .

    குபேரன் : –

    குபேரன் சித்தேச்சுரத்திற் குன்ற வில்லியைப் பரவி வடதிசையரசும் நவநிதித் தலைமையும் , புட்பக விமானமும் , இயக்கர் முதன்மையும் , கதை முதலாம் படைகளும் , சிவபெருமானது தோழமையும் அருளப் பெற்றான் .

    ஈசானன் : – திருவாரூரில் எந்தையைப் பூசித்துப் பெயருக்கு ஏற்ப சிவரூபமும் , படைகளும் , விடைவாகனமும் , பிற சிவசின்னங்களும் வடகீழ்த் திசையரசும் , அதிகாரம் முடிந்தவுடன் சிவனடி நிழல் வாழ்வும் வேண்டிப் பெற்றனன் .

    சூரியன் : –
    சூரியன் காஞ்சியிற் சூலபாணியைப் பூசித்து மறைமண்டலத்தில் தனி இருப்பும் , ஏழ்பரித்தேரும் , நவக்கிரகத் தலைமையும் பெற்றுப் பகுதி மண்டலத்திலே இருக்கப் பெற்றான் .

    சந்திரன் : – சந்திரன் கும்பகோணத்திற் சம்புவை ஆராதித்துப் பயிர்களுக்கு அரசும் , நக்ஷத்திரங்களுக்கு நாயகனாம் , பேறும் பெற்றுப் , பரமனுக்கு ஆபரணமுமாகிச் சூரியனுடன் மேருவை வலம்வரப் பெற்றான் .

    கிரகங்கள்

    இவ்வாறே செவ்வாய் ( அங்காரான் ) திருவிடைமருதூரிலும் , புதன் மதுரையிலும் , வியாழன் ( குரு பிரகஸ்பதி ) சேதுவிலும் , வெள்ளி ( சுக்கிரன் ) திருவாலங்காட்டிலும் , சனி வேதாரணியத்திலும் பரமனை வழிபட்டுச் சோம சூரிய மண்டலங்களின் மேற்கே அருகிலேயிருந்து உயிர்களின் வினைக்கீடாக அனுபவம் தரவும் , வியாழன் தேவர் குருவாகவும் , வெள்ளி அரசர் குருவாகவும் இருக்கப் பெற்றனர் .

    எழு முநிவர் :
    வசிட்டர் முதலான எழுமுநிவரும் ( தில்லைச் ) சிற்றம்பலத்திலே சிவனை வழிபட்டுப் பல நூல் உணர்வும் , நவ கோள்களின் மேல் நிலையிலே வாழும் பேறும் , இறுதியிற் பேரின்ப வீட்டை அடையும் வாழ்வையும் பெற்றனர்.

    ஸ்ரீ ஶூதமாமுனிவர் மேலுஞ் சொல்கிறார் :

    உத்தான பாதன் மைந்தன் துருவன் காசியில் விஸ்வேச்சுரனை வழிபாடு செய்து அளவற்ற வரங்களையும் எழுமுநிவர் நிலைக்கு மேலான நிலையும் , எழுமுநிவரும் தன்னைச்சுற்றி வரும் பேற்றையும் பெற்று உயர் பதத்தில் திகழ்கின்றான் .

    ஆதிசேடன் கும்பகோணத்திற் பரமனை அருச்சித்துக் கடல் புவியனைத்தும் முடித்தலையிற் சுமக்கும் பேறு பெற்றான் .

    இப்படியே எண்ணற்ற தலங்களினும் மலைமுடியினும் கடல் கரைகளிலும் இமையவரும் , முநிவரும் , சித்தரும் , காருடரும் , கந்தருவரும் , வித்தியாதரரும் , இயக்கரும் , சாகரும் மற்றும் பலரும் இறைவனைப் பூசித்துத் தத்தம் பதவியையும் வரங்களையும் பெற்றனர் .

    ஆகையால் அறத்தை விரும்பும் மக்கள் ஒவ்வொரு நாளும் பல்வகைப் பொருளையும் பல்கும் சிவபூஜை செய்யவேண்டும் . இறை வழிபாட்டாற் சித்தராயினர் சிலர்.இங்கனம் வழிபட்டுப்புகழ் பெற்றவர் சனகாதசித்தர் கபிலராதியோர் நித்தராயினர் . சிலர் சாலோகத்தையும் , சிலர் சாமீபத்தையும் ,சிலர் சாரூபத்தையும் , சிலர் சாயுச்சியம் எனும் இறைவன் திருவடி நிழலையும் பெற்றனர் . சில மானிடர் சிவவழிபாட்டால் அளவற்ற செல்வத்தை இம்மையிலே பெற்றும் செல்வச்செருக்கால் மாயையில் மீளவும் மூழ்கி மறுபடியும் வழிபட்டார் . மற்றும் வெற்றி வேண்டினவர் வெற்றியையும் , மனைவி மக்களை வேண்டினவர் மனைவி மக்களையும் , பசு , வாகனம் , செல்வம் , அழகு , வடிவு , வண்மை , சத்தியம் . பராக்கிரமம் முதலிய வேண்டினவர் தாம் வேண்டினவற்றையும் சிவபூஜை வழிபட்டாற் பெற்றனர்.

    திரு ஞானவரோதய பண்டாரம் இயற்றிய உபதேச காண்டம் என்னும் நூலில் இருந்து…

  • Understanding Siva Deekshai

    Understanding Siva Deekshai


    TaHiEnFrEs

    சிவ தீட்சைப் புரிந்து கொள்ளுதல்

    தீக்ஷை பெறுதல் என்பது மனப்பக்குவத்தை ஒட்டியதே தவிர, கட்டாயநிலையையோ, சூழ்நிலையையோ ஒட்டியதல்ல.

    “தீக்ஷை பெற்றுக்கொண்டால் அடுத்து இந்த மடத்திற்கு இளவரசாகவோ அதிபதியாகவோ வரலாம்”; “தீக்ஷை பெற்றுக்கொண்டால் இந்த ஆலயத்தில் பூஜகராக ஆகலாம்” என இவ்வாறு ஓர் எதிர்பார்ப்புடன், ஒரு தேவை அல்லது கட்டாயம் காரணமாகப் பெற்றுக்கொள்வது தீக்ஷை ஆகாது. தீக்ஷை பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு சடங்கும் அல்ல. தீக்ஷை கொடுப்பது என்பதும் வியாபார ரீதியாக நடைபெறுவதன்று; நடைபெறவும் கூடாது.

    பயிற்சியும் பக்குவமும் முதிர்ந்த குருவுக்கும் பக்குவம் வாய்ந்த சீடனுக்கும் இடையே ஞான மயமாகவும் யோகமயமாகவும் நடைபெறும் சிவநிகழ்ச்சியே தீக்ஷை என்பது. அதனால்தான் கிரணம் எனும் ஆகமம் தீக்ஷை ஒரு ஞானச் செயல், சித்கர்மம் என்று கூறுகிறது. ஜாதகர்மம், உபநயனம் முதலானவை ஸம்ஸ்காரங்கள் எனப்படும். ஆனால் தீக்ஷை ஸம்ஸ்காரமாக ஆவதில்லை. ஸம்ஸ்காரங்கள் புறவளர்ச்சியைப் பற்றியவை. தீக்ஷை என்பதோ அகவளர்ச்சியைப் பற்றியது.

    தூய்மையை` இழந்திருக்கும் நிலை, அதாவது பந்தங்களுக்கு ஆட்பட்டிருக்கும் நிலை, எந்தக் காரணங்களால் ஏற்பட்டதோ அந்தக் காரணங்களை நீக்குவதாலும், திடமான நிலையான சிவநிலையை தூய்மைப் பெருநிலையை அளிப்பதாலும் சித்கர்மமான ஞானச்செயல் தீக்ஷை என அழைக்கப்பெறுகிறது.

    அனைத்தையும் அறிதல், அனைத்தையும் செய்தல் எனும் ஆற்றல்களை உணர்த்தும் சிவத்துவம் என்னும் பெருநிலையை அளிப்பதாலும், ஆன்மாவை மாசு படுத்தும் பாவக்குவியலை அழிப்பதாலும் இவ்வாறு அளிப்பது (தீ), அழிப்பது (க்ஷ) எனும் இரண்டு கூறுகளால் – தீக்ஷை எனக் கூறப்படுகிறது என்று மகுடாகம தீக்ஷாவிதி படலத்தில் அருளப்பட்டுள்ளது.

    திருஞான சம்பந்தரும் பிரம்மபுரமும் என்னும் நூலில் முனைவர் S.P சபாரத்தினம் ஶிவாச்சாரியார்.

    शिव दीक्षाई को समझना

    शिव दीक्षा प्राप्त करना परिपक्वता का विषय है, न कि मजबूरी या परिस्थिति का।

    यदि आपको (शिव) दीक्षा मिलती है, तो आप इस मठ में राजकुमार या शासक के रूप में आ सकते हैं”; “यदि आपको दीक्षा मिलती है, तो आप इस मंदिर में पुजारी बन सकते हैं”, किसी ज़रूरत या मजबूरी के कारण इसे लेना दीक्षा नहीं है। दीक्षा प्राप्त करना कोई सामान्य बात नहीं है। यह कोई अनुष्ठान नहीं है और न ही दीक्षा देना, एक व्यावसायिक गतिविधि है और इसे ऐसा नहीं बनाया जाना चाहिए।

    दीक्षा एक प्रशिक्षित और परिपक्व गुरु और एक परिपक्व शिष्य के बीच एक आध्यात्मिक और योगिक दीक्षा है। इसीलिए किरण आगम कहता है कि दीक्षा ज्ञान का एक कार्य है, चितकर्म। जातकर्म, उपनयन आदि को संस्कार कहा जाता है। लेकिन दीक्षा संस्कार नहीं बनती।

    संस्कार बाहरी विकास के बारे में हैं। दीक्षा आत्मनिरीक्षण के बारे में है।

    पवित्रता से रहित होने की अवस्था अर्थात आसक्ति की अवस्था, जो कुछ भी उत्पन्न हुआ है उसके कारणों को दूर कर देती है, तथा शिव की दृढ़ और स्थिर अवस्था को पवित्रता की सर्वोच्च अवस्था प्रदान करती है।

    मकुतागम दीक्षाविथि पाताल में कहा गया है कि इसे देने (थी) और नाश (क्ष) के दो तत्वों के कारण दीक्षा कहा जाता है क्योंकि यह शिव की महान अवस्था प्रदान करती है जो सब कुछ जानने और सब कुछ करने की शक्तियों का एहसास कराती है और आत्मा को प्रदूषित करने वाले पाप को नष्ट करती है।

    डॉ. एस.पी. सबरथनम शिवाचार्य ने तिरुज्ञान संबंध पिरामपुरम पुस्तक में।

    Understanding Siva Deekshai

    Receiving Siva Deekshai is a matter of maturity, not compulsion or circumstance.

    If you get (Siva)Deekshai, then you can come to this monastery as a prince or ruler”; “If you get Deekshai, you can become a pujakar(Pujari) in this temple”, taking it because of a need or compulsion is not Deekshai. Getting Deekshai is not a normal thing. It is not a ritual nor is giving Deekshai, a commercial activity and should not be made as such.

    Deekshai is a spiritual and yogic initiation between a trained and mature Guru and a mature disciple. That is why the Kirana Agama says that Deekshai is an act of wisdom, Citkarma. Jatakarma, Upanayanam etc. are called samskaras. But Deekshai does not become samskara. 

    Samskaras are about external development. Deekshai is about introspection.

    The state of being deprived of purity, i.e. the state of attachment, removes the causes of whatever has arisen, and gives the firm and stable state of Shiva the supreme state of purity.

    It is said in the Makutagama Deekshavithi Patala that it is said to be initiation due to the two elements of giving (thee) and destroying (ksha) because it gives the great state of Shiva which realizes the powers of knowing everything and doing everything and destroys the sinfulness that pollutes the soul.

    Dr. S.P. Sabarathanam Shivacharya in the book Thirujnana Sambandhar Piramapuram.

    Comprendre Siva Deekshai

    Recevoir Siva Deekshai est une question de maturité, pas de contrainte ou de circonstance.

    Si vous obtenez (Siva) Deekshai, alors vous pouvez venir dans ce monastère en tant que prince ou dirigeant » ; « Si vous obtenez Deekshai, vous pouvez devenir un prêtre dans ce temple », le prendre par besoin ou par contrainte n’est pas Deekshai. Obtenir Deekshai n’est pas une chose normale. Ce n’est pas un rituel et donner du Deekshai n’est pas une activité commerciale et ne doit pas être réalisé en tant que tel.

    Deekshai est une initiation spirituelle et yogique entre un Guru formé et mature et un disciple mature. C’est pourquoi le Kirana Agama dit que Deekshai est un acte de sagesse, Citkarma. Jatakarma, Upanayanam, etc. sont appelés samskaras. Mais Deekshai ne devient pas samskara.

    Les Samskaras concernent le développement externe. Deekshai parle d’introspection.

    L’état de privation de pureté, c’est-à-dire l’état d’attachement, supprime les causes de tout ce qui est survenu et donne à l’état ferme et stable de Shiva l’état suprême de pureté.

    Il est dit dans le Makutagama Deekshavithi Patala qu’il s’agit d’une initiation en raison des deux éléments de donner (thee) et de détruire (ksha), car cela donne le grand état de Shiva qui réalise les pouvoirs de tout connaître et de tout faire et détruit le péché qui pollue l’âme.

    Dr S.P. Sabarathanam Shivacharya dans le livre Thirujnana Sambandhar Piramapuram.

    Entendiendo a Siva Deekshai

    Recibir a Siva Deekshai es una cuestión de madurez, no de compulsión o circunstancia.

    Si obtienes a (Siva) Deekshai, entonces podrás venir a este monasterio como príncipe o gobernante”; “Si obtienes Deekshai, puedes convertirte en sacerdote en este templo”, tomarlo por necesidad o compulsión no es Deekshai. Conseguir Deekshai no es algo normal. No es un ritual y dar Deekshai no es una actividad comercial y no debe realizarse como tal.

    Deekshai es una iniciación espiritual y yóguica entre un Guru maduro y entrenado y un discípulo maduro. Por eso el Kirana Agama dice que Deekshai es un acto de sabiduría, Citkarma. Jatakarma, Upanayanam, etc. se llaman samskaras. Pero Deekshai no se convierte en samskara.

    Los samskaras se refieren al desarrollo externo. Deekshai habla de introspección.

    El estado de privación de pureza, es decir, el estado de apego, elimina las causas de cualquier cosa que haya surgido y le da al estado firme y estable de Shiva el estado supremo de pureza.

    Se dice en el Makutagama Deekshavithi Patala que es una iniciación debido a los dos elementos de dar (Thi) y destruir (ksha), ya que otorga el gran estado de Shiva, quien realiza los poderes de conocerlo todo, hacerlo todo y destruirlo el pecado que contamina el alma.

    Dr. S.P. Sabarathanam Shivacharya en el libro Thirujnana Sambandhar Piramapuram.

  • Thodum Kuzhaiyum

    Thodum Kuzhaiyum


    சிவபெருமானது தோடும்‌ குழையும்‌

    TaHiEnFrEs

    வலக்காதில்‌ குழையும்‌, இடக்காதில்‌ தோடும்‌ கூத்தப்பெருமான்‌ அணிந்திருக்கிறார்‌. அதன்‌ குறிப்பு ஆணொடு பெண்ணாய்‌ அமைந்த இவ்வுலகம்‌ தன்னுரு என்பதையும்‌, வையகம்‌ முழுவதும்‌ தன்‌ வடிவு எனப்படுமே என்பதையும்‌ உணர்த்தும்‌ திருக்குறிப்பாம்‌. வலக்காது துடியோசையாகிய ஒலியுலகப்‌ படைப்புக்கு இடம்‌ தந்து நிற்பதையும்‌, இடக்காது அழிவாற்றலை அடக்கியாளுவதாகிய அருளாற்றலையும்‌ அறிவிப்பதே சிவசக்திகளின்‌ தனித்தன்மை என்பதை விளக்குவதாம்‌.

    நீலகண்டம்‌

    இது இறைவனுடைய அருளாற்றலை விளக்குவது என்ற

    குறிப்பை,

    “ கோலால மாகிக்‌ குரைகடல்வாய்‌ அன்றெழுந்த ஆலாலம்‌ உண்டான்‌ அவன்சதுர்தான்‌ என்னேடீ
    ஆலாலம்‌ உண்டிலனேல்‌ அன்றயன்மால்‌ உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம்‌ வீடுவர்காண்‌ சாழலோ ”

    என்று மாணிக்கவாசகர்‌ கூறும்‌ திருச்சாழல்‌ பகுதியால்‌ அறியலாம்‌. அன்றியும்‌, அமரர்‌ சாகும்‌ நஞ்சை உண்டும்‌ தான்‌ சாவாமையால்‌ அவருடைய நித்தியத்தன்மையை விளக்குவதும்‌ ஆம்‌.

    திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன வெளியீடான ஆடல்வல்லான் என்னும் நூலில் இருந்து…

  • Mahavidwan Meenakshi Sundaram Pillai

    Mahavidwan Meenakshi Sundaram Pillai


    TaHiEnFrEs

    திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன மஹாவித்துவான் சைவத்திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் பிறந்த தினம் இன்று

    ஒவ்வொரு தலபுராண ஆசிரியரும் ஒவ்வொரு வகையில் அவையடக்கப் பாடல்களைப் பாடிச் சிறப்பித்திருக்கக் காணலாம். எடுத்துக்காட்டாக,

    திருவம்பர்த் தலபுராணத்தில் பெரும்புலவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் கூறும் அவையடக்கப் பாடல்கள் அவர்தம் பெரும் புலமையைச் சுட்டுவன. இவர்தம் ஆறு பாடல்களும் சுவைபட அமைந்துள்ளன.

    இறையருளே துணை

    பிரமதேவர் வழிபட்ட திருவம்பர்ப் பிரமபுரேசரின் புராணம் பாடுவதற்கு உனக்குத் தகுதியில்லை என்று சிலர் கூறக்கூடும், ஒரு காலத்தில் திருமால் முதலிய தேவர்களும் கூடத் தன்னை அசைக்க முடியாதபடி நிலை பெற்று நின்று, ஒரு துரும்பும் கூட வெற்றி பெற்றது என்னும் வரலாற்றைக் கேனோபநிடதம் கூறுகின்றது. ஆதலின் இறையருள் பெற்றால். இறையருளைத் துணையாகப் பற்றினால், எளியவன் ஆகிய யானும் இந்நூலைப் பாடுதல் இயலும்.

    “பிரமனார் பூசை கொண்டு பெருந்திருக் கோயில் மேய பரமனார் புராணம் பாடும் பண்புனக் கில்லை என்னில் உரமனார் அணங்கி னோர்முன் னோரைவெல் துரும்பு போலத் திரமனார் அருள்இ லேசம் சேர்தரின் உண்டாம் அன்றே.

    திரிசிரபுரம் மஹாவித்வான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய புராணங்கள் எழுபதிற்கும் மேற்பட்டன. பதிகம், பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, யமகவந்தாதி, திரிபந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, மாலை, தூது என்று பல பிரபந்தங்களும் இயற்றியுள்ளார். அவைகளில் 44 பிரபந்தங்களை திரு உ.வே.சா ஐயரவர்கள் பதிப்பித்துள்ள பிள்ளையவர்களின் பிரபந்தத் திரட்டிற் காணலாம்.

  • Dhaksha Kaandam

    Dhaksha Kaandam


    புஷ்பேஷு கந்தவஜ் ஜ்ஞேயஸ் திலேஷ்வபிச தைலவத் |
    கண்டாயாம் த்வநிவத் த்வக்நௌ ப்ரபாவத் பரமேஸ்வர: |
    ஸர்வத்ர ஸர்வதா தேவஸ் ஸர்வேஷ்வபிச ஸம்ஸ்தித: ||

    • தக்ஷ காண்டம்

    “மலரில் மணம் போன்றும், எள்ளில் எண்ணெய் போன்றும், மணியில் நாதம் போன்றும், அக்கினியிற் பிரகாசம் போன்றும் எவ்விடங்களிலும் எக்காலங்களிலும் எப்பொருள்களிலும் சிவபெருமான் வியாபித்துள்ளார் ‘


  • Svētāsvara upaniṭatam

    Svētāsvara upaniṭatam


    तमीश्वराणां परमं महेश्वरं तं देवतानां परमञ्च दैवतं ।
    पतिं पतीनां परमं परस्ताद् विधेम देवं भुवनेशमीढ्यम् ।।

    தமீஶ்வராணாம் பரமம் மஹேஶ்வரம் தம் தே³வதானாம் பரமஞ்ச தை³வதம் |
    பதிம் பதீனாம் பரமம் பரஸ்தாத்³ விதே⁴ம தே³வம் பு⁴வனேஶமீட்⁴யம் ||

    “ஈசுரர்களுக்குள்ளே பரமமகேசுவரராயும், தேவர்களுக்குள்ளே மஹாதேவராயும், மேலாய பரமபதியாயும்,புவநேசராயும், ஸ்துதிக்கற்பாலராயுமுள்ள அந்த மஹாதேவரை அறிகின்றோம்” என்று ஸ்வேதாஸ்வதரோபநிடதம் குறிப்பிடுகிறது.

    Transliteration :

    tam-īśvarāṇāṃ paramaṃ maheśvaraṃtaṃ devatānāṃ paramaṃ ca daivatam ।

    patiṃ patīnāṃ paramaṃ parastādvidāma devaṃ bhuvaneśam-īḍyam ।।

    -Śvetāśvataropaniṣad 6.7

    Translation :

    We know Him who is the Supreme Lord of lords, the Supreme Deity of deities, the Ruler of rulers;

    who is higher than the imperishable prakriti and is the self-luminous, adorable Lord of the world.


  • Civapuṇṇiyatteḷivu

    Civapuṇṇiyatteḷivu


    அடியார்க்கு எளியனாகிய இறைவன்‌, ஆலயத்துக்கு வந்து தரிசிக்காத பலருக்கும்‌ அருள்‌ சுரக்கத்‌ திருவிழாக்‌ காலங்களில்‌ வெளியே உலாவருகிறான்‌. அவ்வமயம்‌ பாராமுகமாயும்‌, படுத்துத்‌ தூங்கிக்‌ கொண்டும்‌ இருப்பவர்கள்‌ பாவத்தை ஈட்டுகின்றனர்‌.

    திருவிழாக்களில்‌ ஈசனை வலம்வந்தால்‌ ஒவ்வோரடிக்கும்‌ அசுவமேதப்‌ பலன்‌ கிட்டும்‌( சிவபுண்ணியத்தெளிவு 34) ஏதாவது ஒரு காலம்‌ வலம்‌ வந்தாலும்‌ ஏழு பிறவிப்‌ பாவம்‌ போகும்‌; திருவிழாவில்‌ நாள்‌ தோறும்‌ வலம்‌ வருபவர்‌. உருத்திரப்‌ பதவியை அடைவர்‌ (சிவபுண்ணியத்தெளிவு 37)

    திருவிழா ஆரம்பத்தில்‌ இடபக்‌ கொடி ஏற்றப்படும்‌; அவ்வமயம்‌ அக்கொடிப்‌ பின்‌ சென்று வலம்‌ வருவோர்க்கு பூமி, பொன்‌, புத்திரர்‌, பெளத்திரர்‌ முதலிய செல்வம்‌ பெருகும்‌. (சிவபுண்ணியத்தெளிவு 35)

    இடபக்‌ கொடியை ஏற்றும்‌ காலத்துச்‌ செய்யப்படும்‌ நிவேதனமான இடப நிவேதனத்தை அன்போடு ஏற்று அருந்தும்‌ பெண்‌, மலடி என்று நிச்சயிக்கப்பட்டிருந்தாலும்‌ சிறந்த மகவைப்‌ பெற்றெடுப்பாள்‌ (சிவபுண்ணியத்தெளிவு 36)