Tag: சுத்தாத்வைத_சைவசித்தாந்தம்

  • The Rituals of Śiva Worship: A Symbolic Analysis

    The Rituals of Śiva Worship: A Symbolic Analysis


    TaHiEnFrEs

    சிவபூஜையின் போது செய்யப்படும்,

    • அபிஷேகம் – சிருஷ்டி கிருத்யம்
    • நைவேத்தியம் – ஸ்திதி கிருத்யம்
    • பலி – சம்ஹார கிருத்யம்
    • தீபம் – திரோபவ கிருத்யம்
    • விபூதி – அனுக்கிரக கிருத்யம்

    என்று கூறப்படுகிறது.

    சிவபூஜையால் விஸ்தாரமான ஞானத்தையும் அக்னி காரியத்தால் சம்பத்தையும் ஜபத்தினால் பாப சுத்தியையும் தியானத்தால் மோக்ஷத்தையும் ஒருவன் அடைகிறான் என்பது ஸ்ரீமத் ஆகம சித்தாந்தம்.

    சமயபோதச் சொற்பொழிவுகள்” என்னும் நூலில் இருந்து…


    Śivapūjaiyiṉ pōtu ceyyappaṭum,

    • Abhiṣēkam – Sṛṣṭi Kirutyam 
    • Naivēttiyam – Stiti Kirutyam 
    • Bali – Saṃhārakirutyam 
    • Dīpam – Tirōpava Kirutyam
    • Vibhūti – Aṇukkiraka Kirutyam eṉṟu kūṟappaṭukiṟatu.

    Śivapūjaiyāl vistāramāṇa ñāṉattaiyum akṉi kāriyattāl campattaiyum japattiṉāl pāpa cuttiyaiyum tiyāṉattāl mōkṣattaiyum oruvaṉ aṭaikirāṉ eṉpatu Śrīmat Āgama Siddhāntam.

    Camayapōtac coṟpoḻivugaḷ” eṉṉum nūlil iruntu…

    यह कहा गया है कि, शिवपूजा (Śivapūjā) के दौरान, निम्नलिखित संबंध स्थापित होते हैं:

    • Abhiṣekam (अभिषेकम्) – Sṛṣṭi Kṛtyam (सृजन का कार्य)
    • Naivedyam (नैवेद्यम्) – Sthiti Kṛtyam (संरक्षण का कार्य)
    • Bali (बलि) – Saṃhāra Kṛtyam (विनाश/विलय का कार्य)
    • Dīpam (दीपम्) – Tirobhava Kṛtyam (आवरण/छिपाव का कार्य)
    • Vibhūti (विभूति) – Anugraha Kṛtyam (कृपा का कार्य)

    और, श्रीमत आगम सिद्धान्त (Śrīmat Āgama Siddhānta) के अनुसार, एक व्यक्ति निम्नलिखित प्राप्त करता है:

    • Śivapūjā के माध्यम से विस्तृत ज्ञान (vistāramāṇa jñānam)।
    • Agni Kāryam (अग्नि अनुष्ठान) के माध्यम से सम्पत्ति/समृद्धि (sampattu)।
    • Japam (मंत्र जप) के माध्यम से पाप शुद्धि (pāpa śuddhi)।
    • Dhyānam (ध्यान) के माध्यम से मोक्ष (Mokṣa)।

    यह अंश ‘Samayabodha Soṛpolivugaḷ’ नामक पुस्तक से है।

    It is said that, during the Śivapūjā, the following holds:

    • Abhiṣekam – Sṛṣṭi Kṛtyam (The Act of Creation)
    • Naivedyam – Sthiti Kṛtyam (The Act of Preservation)
    • Bali – Saṃhāra Kṛtyam (The Act of Dissolution/Destruction)
    • Dīpam – Tirobhava Kṛtyam (The Act of Concealment/Obscuration)
    • Vibhūti – Anugraha Kṛtyam (The Act of Bestowal of Grace)

    And, according to the Śrīmat Āgama Siddhānta, a person attains the following:

    • Extensive knowledge (vistāramāṇa jñānam) through Śivapūjā.
    • Wealth/Prosperity (sampattu) through Agni Kāryam (Fire Ritual).
    • Purification from sin (pāpa śuddhi) through Japam (Mantra Recitation).
    • Mokṣa (Liberation) through Dhyānam (Meditation).

    This passage is from the book ‘Samayabodha Soṛpolivugaḷ’

    Il est dit que, pendant la Śivapūjā, la corrélation suivante est établie :

    • Abhiṣekam – Sṛṣṭi Kṛtyam (L’Acte de Création)
    • Naivedyam – Sthiti Kṛtyam (L’Acte de Préservation)
    • Bali – Saṃhāra Kṛtyam (L’Acte de Dissolution/Destruction)
    • Dīpam – Tirobhava Kṛtyam (L’Acte de Dissimulation/Obscuration)
    • Vibhūti – Anugraha Kṛtyam (L’Acte d’Octroi de la Grâce)

    Et, selon le Śrīmat Āgama Siddhānta, une personne atteint ce qui suit :

    • Connaissance étendue (vistāramāṇa jñānam) à travers la Śivapūjā.
    • Richesse/Prospérité (sampattu) à travers l’Agni Kāryam (Rituel du Feu).
    • Purification du péché (pāpa śuddhi) à travers le Japam (Répétition du Mantra).
    • Mokṣa (Libération) à travers le Dhyānam (Méditation).

    Ce passage est tiré du livre ‘Samayabodha Soṛpolivugaḷ’.

    Se dice que, durante el Śivapūjā, la siguiente correlación se mantiene:

    • Abhiṣekam – Sṛṣṭi Kṛtyam (El Acto de Creación)
    • Naivedyam – Sthiti Kṛtyam (El Acto de Preservación)
    • Bali – Saṃhāra Kṛtyam (El Acto de Disolución/Destrucción)
    • Dīpam – Tirobhava Kṛtyam (El Acto de Ocultación/Ofuscación)
    • Vibhūti – Anugraha Kṛtyam (El Acto de Concesión de la Gracia)

    Y, según el Śrīmat Āgama Siddhānta, una persona alcanza lo siguiente:

    • Conocimiento extenso (vistāramāṇa jñānam) a través del Śivapūjā.
    • Riqueza/Prosperidad (sampattu) a través del Agni Kāryam (Ritual del Fuego).
    • Purificación del pecado (pāpa śuddhi) a través del Japam (Repetición de Mantra).
    • Mokṣa (Liberación) a través del Dhyānam (Meditación).

    Este pasaje es del libro ‘Samayabodha Soṛpolivugaḷ’.

  • The Divine Beauty of Śiva: A Description

    The Divine Beauty of Śiva: A Description


    TaHiEnFrEs

    ॐ नमो हिरण्यबाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतए अंबिका पतए उमा पतए पशूपतए नमो नमः ||

    ௐ நமோ ஹிரண்யபா³ஹவே ஹிரண்யவர்ணாய ஹிரண்யரூபாய ஹிரண்யபதயே அம்பி³கா பதயே உமா பதயே பஶூபதயே நமோ நம꞉ ||

    “பொற்கையினர்க்கு, பொன்வண்ணர்க்கு, பொன்ரூபர்க்கு, பொற்பதிக்கு அம்பிகா பதிக்கு உமாபதிக்கு பசுபதிக்கு நமஸ்காரம்‌ ! நமஸ்காரம்‌ !! ” என்று தைத்திரீய ஆரணியகம்‌ கூறுகின்‌றது.

    சிவபிரான்‌ திருமேனியைப்‌ பொன்னிறமுடையதென்று சுருதிகள்‌ கூற, அவற்றுக்கியைந்து திராவிடசுருதிகளும்‌ அங்கனம்‌ பொன்வண்ணர்‌ என்று கூறுதலோடமையாது, செம்‌ பவளவண்ணர்‌, மாணிக்கவண்ணர்‌, தீவண்ணர்‌ போன்றும் அங்கங்கே புகழ்வனவாயின.

    ஸ்படிகமேனியர்‌, சங்‌கொத்தமேனியர்‌ என்றற்றொடக்கத்தனவாக அத்திராவிடசுருதிகள்‌ சிற்சில இடங்களிற்‌ புகழ்வது அவர்‌ செம்பவளமேனியிற்‌ படிந்திருக்கும்‌ விபூதியின்‌ வெண்ணிற மிகுதிப்பாடு பற்றியாம்‌.

    ‘ பொன்நேர் தருமே னியனே புரியும்
    மின்நேர் சடையாய் விரைகா விரியின்
    நன்னீர் வயல்நா கேச்சுர நகரின்
    மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே.’

    திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருநாகேச்சரத்து தேவாரம்.

    மாசில் தொண்டர்மலர் கொண்டுவ ணங்கிட
    ஆசை யாரவரு ணல்கிய செல்வத்தர்
    காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம்
    ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.

    திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருக்கருகாவூர்‌ தேவாரம்.

    ‘வம்பல ரும்மலர்க் கோதைபா கம்மகிழ் மைந்தனும்
    செம்பவ ளத்திரு மேனிவெண் ணீறணி செல்வனும்
    கொம்பம ரும்மலர் வண்டுகெண் டுந்திருக் கோட்டாற்றுள்
    நம்பனெ னப்பணி வார்க்கருள் செய்யெங்கள் நாதனே’.

    திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருக்கோட்டாறு தேவாரம். ,

    ஏவணத்த சிலையால்முப் புரமெய் தான்காண்
    இறையவன்காண் மறையவன்காண் ஈசன் தான்காண்
    தூவணத்த சுடர்ச்சூலப் படையி னான்காண்
    சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கொண்டான் தான்காண்
    ஆவணத்தால் என்றன்னை ஆட்கொண் டான்காண்
    அனலாடிகாண் அடியார்க் கமிர்தா னான்காண்
    தீவணத்த திருவுருவிற் கரியுரு வன்காண்
    திருவாரூ ரான்காண் என்சிந்தை யானே.

    திருநாவுக்கரசர் பெருமான் அருளிய திருவாரூர் தேவாரம்.

    பொன்னார் மேனியனே புலித்
    தோலை அரைக்கசைத்து
    மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
    கொன்றை யணிந்தவனே
    மன்னே மாமணியே மழ
    பாடியுள் மாணிக்கமே
    அன்னே உன்னையல்லால் இனி
    யாரை நினைக்கேனே

    சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருமழபாடி தேவாரம்.

    ‘மருவார் கொன்றை மதிசூடி
    மாணிக் கத்தின் மலைபோல
    வருவார் விடைமேல் மாதோடு
    மகிழ்ந்து பூதப் படைசூழத்
    திருமால் பிரமன் இந்திரற்குந்
    தேவர் நாகர் தானவர்க்கும்
    பெருமான் கடவூர் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே’

    ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்கடவூர் மயானத்து தேவாரம்.

    காசிவாசி சாம்பவஸ்ரீ செந்திநாதையர் இயற்றிய தேவாரம் வேதசாரம் என்னும் நூலில் இருந்து…

  • The Significance of Śiva Bhakti and Śiva Pūjā in Kali Yuga for Spiritual Growth

    The Significance of Śiva Bhakti and Śiva Pūjā in Kali Yuga for Spiritual Growth


    TaHiEnFrEs

    மஹா இதிகாசமாகிய சிவரகசியம் – நாற்பத்திரண்டாம் அத்தியாயத்தில் இருந்து…

    நந்திதேவர் சாம்பவரை அறிவித்தது.

    சிவபூஜையின் மேன்மையை வசிட்டர் கூறியதைக்கேட்ட அரசன் ஒருவன் அகமகிழ்ந்து சம்சார சுகத்தைத் துச்சமென்று தள்ளிச் சிவபூசையில் விருப்புறறவனாய் ராஜ்யபாலனம் அதற்கு இடையூறாகுமென்று கண்டு தனது மூத்தபுதல்வனுக்கு ராஜ்ய பாரத்தைக் கொடுத்து அவனைச் சிவார்ச்சனையை விடாமற் செய்து வரும்படிப் போதித்து ஏராளமாய்த்தனத்தை உதவிச் சாம்பவர்களையு மாராதித்து விபூதி ருத்திராக்ஷ தாரணங்களில் ஓர் கணமேனும் வழுவாதிருந்து தீக்ஷைபெற்றுச் சிவபூசை செய்து சிவத்யான பராயணனாய்க் காலங்கழித்து நற்கதியடைந்தான்.

    அப்படியே நீரும் சிவபூஜாபரராயிருந்து சாம்பவர்களோடு சகவாசஞ் செய்து சிவலிங்கத்தைப் பூசித்துக்கொண்டிரும். சிவபூசை செய்யாமல் மஹாஐஸ்வர்யத்தை யடைந்து சுகித்தவர் யாருமில்லை. சங்கரானுக் கிரகத்தினாலேயே சகல பாக்யங்களும் பெறப்படுவனவாம். சிவபூஜையின்றிப் பாக்ய மெங்கனம்வரும்? இனி அச்சிவபூஜைக்கு வேண்டிய சௌகரியமும் மஹா பாக்யவான்களுக்கே கிடைக்கும் சிவார்ச்சனைக்கு உபயோகப்படாத பாக்யங்களைத் துர்ப்பாக்கியங்களென்றே யறிய வேண்டும். பாக்ய மிருந்தால் வாணாள் முழுதும் சிவார்ச்சனையில் வழுவாதிருக்கப் பெறலாகும். அவனது ஆயுளே சபலமாகும். . இப்போது சாம்பவர்களைச் சிரத்தை யுடன் பூசித்தாதரிப்பின் சம்புவினருளுக்காளாகலாமென்று நாரதர் கூறியருள அதனைக் கேட்டு மிக்க மகிழ்ந்து சாம்பவ முனிவர்களைப் பூசித்துக்கொண்டு சிவார்ச்சனாபரரானாரென்று நந்திகேஸ்வரர் கூற மஹாபுண்யமாகிய அச்சரிதத்தைப் பிரம்மாமுதலிய சகலருங்கேட்டுச் சந்தோஷத்தால் மயிர் சிலிர்த்துப் பரவசராய்நின்று நந்தியெம்பெருமானை வணங்கி, ஓ ஸ்வாமி! இப்போது நாங்கள் இங்கு செய்யவேண்டிய காரியமென்ன? அந்த ரகசியத்தைக் கூறியருள வேண்டுமென்று பிரார்த்தித்தனர். அப்போது நந்தீஸ்வரர் பிரம்மாதிகளைப் பார்த்துக் தேவர்களே! எவரெவர் கூறியதாவது, பரமசாம்பவர்களாயெப்போதுஞ் சிவார்ச்சனை செய்வதிலேயே பேராவலுடையோரா யிருக்கின்றனரோ மிக்க கோரமாகிய கலியுகத்தில் சித்த சுத்தத்துடன் எவர் சிவசரணாரவிந்தத்தை விட்டகலாத மனமுடையோராய்ச் சிவோபாசனையோடும், “ஸ்ரீ நீலகண்டமதனாந்தக சந்திரமௌளே ஸ்ரீ பாலலோசன யமாந்தக விஸ்வமூர்த்தே.” அடியேனை ரக்ஷியுங்களென்று எவர் ஓர் தடவையாவது பக்தியுடன் கூறுகின்றனரோ அவர்களும் உங்களுக்குப் பூஜ்யராவார்.

    இதுவே பரமரகஸ்யம்.

  • The Inner and Outer Signs of Śiva Devotees

    The Inner and Outer Signs of Śiva Devotees


    TaHiEnFrEs

    அடியார் இலக்கணம் .

    நைமிசாரண்ய முநிவர்கள் பத்தர்களுடைய இலக்கணம் எது என்று கேட்கச் ஶூதமுநிவர் கூறுகின்றார் : – தேவர் , அசுரர் , அரக்கர் , இயக்கர் கந்தருவர் , நாகர் , முநிவர் , நரர் ஆகிய எவ்வகையருள்ளும் அடியார்கள் உண்டு . அடியார்களுக்குள் வருணாச்சிரம பேதம் கிடையாது ; யாவரும் மாகேசுரர் . 

     அடியார்களது அகத்துள் விளங்கும் இலக்கணம் மூன்று – அவைதாம் 

    (i ) மானத ஜபம் , 

    ( ii ) மானத சிவபூஜை 

    ( iii ) உள்ளத்தே பரம்பொருள் தோற்றமளித்தல் . 

    புறத்தே தோன்றும் இலக்கணம் பத்து அவைதாம். : 

    ( 1 ) கண்டம் தழுதழுத்தல் , 

    (2 ) நா அசைதல் 

    ( 3 ) இதழ் துடித்தல் 

    ( 4 ) நடுக்கமுறல் 

    ( 5 ) மயிர் பொடித்தல் 

    ( 6 ) அங்கம் வெதும்பி வியர்த்தல் 

    ( 7 ) தள்ளாடி வீழ்தல் 

    ( 8 ) கண்ணீர் சொரிதல் 

    ( 9 )  இரங்குதல் 

    ( 10 ) ஆர்வத்தால் பரவசப்படுதல் . 

    இத்தகைய அடியார்கள் புண்ணியர்கள் ; வீடுபேறு பெறுவார்கள் ;

    திருநீறும் கண்டிகையும் புனைந்தவர்களிடம் மேற்சொன்ன இலக்கணங்கள் இல்லாவிடினும் , அவர்களைக் கண்டால் அவர்களை வீழ்ந்து வணங்கி உபசார மொழிகளைக் கூறவேண்டும் . சிவாசாரியர்களையும் சிவனடியர்களையும் பணிந்தேத்துபவர் யாராயிருந்தாலும் நோயற்று மக்களுடன் உலகில் பல்லாண்டு வாழ்வர் ; சகல தேவர்களாலும் உபசரிக்கப்பட்டு சிவலோகம் மருவி ஈற்றில் சிவனடி கூடுவர் . சிவபுண்ணியத்தின் மேன்மை யெல்லாம் தேவிக்குச் சிவபிரான் முன்னொரு காலத்தில் கூறியருளினர் . அதிபக்குவர்க்கே சிவபுண்ணியத்தின் மேன்மையைக் கூறலாகும் . சிவபிரான் தேவியின் பொருட்டு உரைத்தது இது என்றால் தமியேனாற் கூற முடியுமோ ?

    திரு ஞானவரோதய பண்டாரம் இயற்றிய உபதேச காண்டம்(1950) என்னும் நூலில் இருந்து…

    இப்பதிவினை யூடியூபில் கேட்டு இன்புற…

  • The Importance of Vedic Tradition in Śaivam

    The Importance of Vedic Tradition in Śaivam


    TaHiEnFrEs

    வைதிக சைவம் என்ற பெயரால் பெறப்படும் பொருள் வேத சம்பந்தமான சிவாகமம் என்பதாம். வைதிகம் – வேத சம்பந்தமுள்ளது. * சைவம் – சிவாகமம். எனவே வேத நூலையும் சிவாகம நூலையும் முக்கிய பிரமாணமாகக் கொண்ட ஒரு சிறந்த சமயத்துக்கு வைதிக சைவம் என்ற பெயர் பொருந்துகின்றது.

    ஆன்மாக்கள் எண்ணில்லாதனவாய் அநாதியாய்ப் பல திறப்படப் பந்தித்த பாசத்தடையுடையவைகளாய் இருத்தலின் அவைகளுக்கு முதல்வன் அப்பாசத்தடையால் நேர்ந்த அறியாமையைப் போக்கி அறிவை விளக்குகின்ற போது ஆன்மாக்களுக்கெல்லாம் அறிவு ஒரு தன்மையாக விளங்குவதில்லை. சூரியன் நடு நின்று ஒரே தன்மையாகப் பூதவிருளைப் போக்கிக்கண்ணொளியை விளக்கினாலும் கண்களெல்லாம் ஒரே தன்மையாக விளங்கப் பெறாது தத்தம் தூய்மைக்கு ஏற்றபடி விளங்கப் பெறுவது * கண்கூடு

    இவ்வாறு தம்மைப் பந்தித்த பாச சத்தி பேதத்தால் பல திறப்பட அறிவு விளங்கப் பெற்ற ஆன்மாக்கள் ஓதி உணர்ந்து ஒழுகத்தக்க நூல்களும் பலதிறப்படும் அல்லவா? அவைகளை அருளிச் செய்த முதல்வன் ஆன்மாக்களை இரண்டு பெரும் பகுதிகளாக வகைப்படுத்தி, அவைகளுக்குப் பொதுவாக ஒரு வகை நூல்களையும் சிறப்பாக ஒரு வகை நூல்களையும் அருளிச் செய்தான். • பொது நூல் வேதமெனப் பெயர் பெறும். சிறப்பு நூல் சிவாகமமெனப் பெயர் பெறும். சிவாகமத்துக்குச் சைவம் என்ற பெயரும் உண்டு.

    • “வேத நூல் சைவ நூல்” சித்தியார் 8ஆம் சூத்திரம் செய்யுள் 267ல் சிவாகமங்கள் சைவமென்னும் பெயரால் கூறப்பட்டிருத்தல் காண்க (267) பூதவிருள் – வெளியேயுள்ள இருட்டு.

    அவற்றுள் வேதமானது உலகியலைக் கூறுவது, பொது வகையாக மெய்ந்நெறியாகிய சிவ நெறியையும் அது கூறும், சைவமானது சிவநெறியைச் சிறப்பாக விரித்துக் கூறுவது.

    ** வேத நூல் ஆன்மாக்களுக்கெல்லாம் பொது, சைவ நூல் விளக்கம் மிகுதியுற்ற ஆன்மாக்களுக்கே சிறப்பாக உரியது.

    இக்காலத்தில் ஒரு சிலர் தமது பேதைமையால் வேதத்தை நிந்தித்துப் புறக்கணித்தும், சைவத்தைப் போற்றுவதுபோற் பாவித்து அதன் மூல தத்துவங்களைக் களைந்தும் வருகின்றார்கள். வேறு சிலர் தாங்கள் ஒரு சமயத்தையும் சாராது, சமயாசாரியர்பாற் சமய வுண்மைகளைக் சமய நிச்சயம் செய்ய கேட்டறியாது தான்றோன்றிகளாய்ச் முற்படுகின்றார்கள்.

    கடவுளால் அருளிச் செய்யப்பட்ட வேதத்துக்கு விரோதமாகச் சித்தாந்த சைவம் எவ்விதத்திலும் எப்பொழுதும் இருக்க முடியாது. ஆகையாற்றானே பெரியோர்கள் வைதிகம் என்ற அடைகொடுத்துச் சைவத்தை வழங்கி வந்திருக்கின்றார்கள்.

    “இராஜாங் கத்தில்
    அமர்ந்தது வைதிகசைவம் அழகி தந்தோ”

    • தாயுமான சுவாமி பாடல், ஆகாரபுவனம் 10.
      என்றார் நமது தாயுமானப் பெருந்தகையார்.

    ஆதலால் சைவர் ஒவ்வொருவரும் வேதத்தையும் வேதக் கிரியைகளையும் கைக்கொண்டே சைவநெறியில் சரிக்கவேண்டும் என்பதை வைதிக சைவம் என்ற பெயர் விளக்குகின்றது.

    “உலகியல் வேதநூல் ஒழுக்கமென்பதும், நிலவு மெய்ந்நெறி சிவநெறியதென்பதும்” – என்பது பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் – 820.

    ** “நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும் நிகழ்த்தியது” – என்பது சிவஞான சித்தியார்.

    • கண்கூடு – பிரத்தியக்ஷம்.

    வேதமொடாகமம் மெய்யாம் இறைவனூல், ஓதும் பொதுவும் சிறப்புமென்றுன்னுக – என்பது திருமந்திரம். “ஆரண நூல் பொது சைவம் அருஞ்சிறப்பு நூலாம்” என்பது சிவஞான சித்தியார்.

    வைதிக சைவம் என்னும் தலைப்பில் பஞ்சாக்ஷரபுரம் ஸ்ரீ வாலையானந்த சுவாமிகள்.

  • The Steps of Śiva Pūjā: A Comprehensive Overview

    The Steps of Śiva Pūjā: A Comprehensive Overview


    TaHiEnFrEs

    சிவபூஜை

    சிவபூசையாவது, புட்பம் திருமஞ்சனம் முதலிய உபகரணங்கள் கொண்டு, ஆத்துமசுத்தி தானசுத்தி திரவியசுத்தி மந்திரசுத்தி இலிங்கசுத்தி என்னும் பஞ்ச சுத்திகளும் செய்து, சிவலிங்கத்தின் பீடத்திலே சத்தியாகி சத்தி பரியந்த பதுமமாகிய சிவாசனம் பூசித்து, அதன்மேல் இலிங்கத்திலே வித்தியாதேகமாகிய மூர்த்தியை நியாசஞ்செய்து, அவ்வித்தியாதேகத்துக்குச் சீவனாய் உள்ள நிஷ்களரூபரும் ஞானானந்தமயரும் சருவகர்த்தாவும் சர்வவியாபகருமாகும் பரமசிவனாகிய மூர்த்திமானைத் துவாதசாந்தத்தின் மேலே தியானித்து, முன்னே நியாசஞ் செய்த வித்தியாதேகத்தில் ஆவாகித்து, “சுவாமி, சருவ சகத்துக்கும் நாதரே, பூசையின் முடிவு எதுவரையுமோ அதுவரையும் நீர் பிரீதியுடன் இவ்விலிங்கத்திலே சாந்நித்தியராய் இருக்க வேண்டுகிறேன்.” என்று விண்ணப்பம் செய்து, பூசித்து ஸ்தோத்திரம் பிரதக்ஷிணம் நமஸ்காரம் பண்ணி முடித்தலாம்.

    சண்டேச நாயனார் புராண சூசனத்தில் பண்டிதர் மு.கந்தையா அவர்கள்.

  • The Fivefold Worship of Śiva according to Śivajñāna Siddhiyār

    The Fivefold Worship of Śiva according to Śivajñāna Siddhiyār


    TaHiEnFrEs

    ஞானநூல் தனையோதல் ஒது வித்தல்
    நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா
    ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
    இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை
    ஊனமிலாக் கன்மங்கள் தபம்செபங்கள் தியானம்
    ஒன்றுக்கொன் றுயருமிவை ஊட்டுவது போகம்
    ஆனவையான் மேலான ஞானத்தால் அரனை
    அருச்சிப்பர் வீடெய்த அறிந்தோ ரெல்லாம்

    சிவஞானசித்தியார் – சாதனவியல்-எட்டாஞ் சூத்திரம்(23).

    (கொ – டு) ஊனம் இலா கன்மங்கள் தபம் செபங்கள் தியானம் இவை ஒன்றுக்கு ஒன்று உயரும். போகம் ஊட்டுவது. ஆனவையான் ஞான நூல்தனை யோதல், ஓதுவித்தல், நற்பொருளைக் கேட்பித்தல், நன்றாத்தான் கேட்டல், ஈனம் இலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும் எழில்ஞான பூசை. இறைவன் அடி அடைவிக்கும். வீடு எய்த அறிந்தோர் எல்லாம் மேலான ஞானத்தால் அரனை அருச்சிப்பர்.

    (பொ-ரை.) இறைவனை வழிபடுகின்ற முறை, சிவதருமோத்தரத்திற் கூறியவாறு கன்மயாகம், தவயாகம், செபயாகம், தியானயாகம்,ஞானயாகம் என ஐவகைப்படும். யாகம் என்பது வழிபாடாம். அவற்றுள் குறைவில்லாத கன்மயாகமாவது விடியஐந்து நாழிகைக்குமுன் எழுந்திருந்து செய்யும் சிவ சிந்தனை முதலாகச் சிவபூஜை அக்கினி காரியம் ஈறாகிய செயல்களாம்.

    தவயாகமாவது, சாந்திராயண விரத முதலியவற்றால் சரீரத்தை மெலிவித்தல். செபயாகமாவது, மந்திரங்களை வாசகம், ரகசியம், மானதம் என்னும் முறையில் தத்தம் தகுதிக்கேற்றவாறு செபித்தல். தியான யாகமாவது, இருதய முதலிய தானங்களில் சதாசிவன் முதலிய மூர்த்திகளின் திருமேனிகளைப் பாவித்துத் தியானிப்பது. இந்த நான்கு யாகங்களும் ஒன்றுக்கொன்று உயரும். உயர்தலாவது, பிரபஞ்சப் பற்றுநீக்கத்தைக் குறிப்பதாம். ஆயி’னும் பற்று நீக்கம் அறவே உண்டாகாமையால் அவ்வழிபாடுகள் போகத்தையே கொடுக்கும். போகம் என்பது சாலோகாதி பதமுத்தியாம். இனி ஞானயாகமாவது, ஞான சாத்திரத்தை முன்னொடு பின் மலைவற ஆசிரியனின்றிப் படித்தலும், தான் படித்தபடி பக்குவமுடைய பிறர்க்குப் படிப்பித்தலும், அச்சாத்திரத்துள்ள நன்மையாகிய பொருள்களைத் தமது மதிநுட்பத்தால் ஆராய்ந்து பிறர்க்குச் சொல்லுதலும், இவ்வாறு சொல்லினும் இது ஆராய்ச்சி அறிவேயன்றி யநுபவ அறிவாகாமையால், அவ்வநுபவ அறிவு விளங்கும் பொருட்டு ஞானாசாரியனிடத்து அச் சாத்திரப் பொருளை உபதேச முறையிற் கேட்டலும், கேட்டவாறே குறைவில்லாத அப்பொருளைத் தனித்திருந்து சிந்தித்தலும் என ஐவகைப்படும்.

    இவ்வாறு ஐவகைப்பட்ட அழகிய ஞான யாகம் ஒன்றுமே முத்தியைத்தரும். முத்தியடைய விரும்புவோர் யாவரும் மேம்பட்ட ஐவகையான இந்த ஞான யாகத்தினாலேயே சிவபிரானை வழிபடக்கடவர்.
    (எ-று)

    தெளிதற்கும், நிட்டைக்கும் ஆசிரியன் உபதேசமே யன்றி நூல் வேண்டாமையான், நூலானா கற்பாலனவாகிய ஞான நூல் ஓதல், ஓதுவித்தல், கேட்பித்தல், கேட்டல், சிந்தித்தல் என்னும் ஐந்துமே ஞானயாகமெனப்பட்டது. ஞானாசாரியனிடத்துக் கேட்குமுன்னர்ப் பிறர்க்குச் சொல்லுதல் கூறி யிருத்தலினால், சாத்திரப் பொருளைத் தன்னுடைய நுண்ணறிவால் அறிந்து ‘சொல்லுதல் கூடும் எனவும், அநுபவ முண்டாதற்குரிய அநுசந்தானத்தை ஆசிரியனிடத்து உபதேச முறையால் கேளாதவர் சொல்லாரெனவும் அறிக. உபதேசங்கேட்டு அநுபவம் வந்த பின்னர்ப் பிறர்க்கு உபதேச நெறியைச் சொல்லுங்கால் அச்செயல் நூற்கலப்பால் சிந்தனையுள் அடங்குமாதலின் அக் கேட்பித்தலை வேறு கூறாராயினர், அவ்வுபதேசத்தைச் சிந்தித்தலென்று
    கூறினமையினாலேயே, அநுபவம் வந்த பின்னர்ப் பிறர்க்கு உபதேசிக்கலாமென்பது பெறப்படும். அது சிந்தனையுளடங்குமாதலானன்றோ, வருஞ் செய்யுளில் கேட்டலுக்குப்பின் கேட்பித்தல் கூறாது சிந்தித்தலே கூறப் பட்டதென்க.

    சாந்திராயணமாவது- அமாவாசை முதல் பௌர்ணமி வரை, உண்ணும் அன்னத்தைப் பதினைந்து பங்காக்கி நாளொன்றுக்கு ஒவ்வொரு பங்காகக் குறைத்துண்ணலும், பௌர்ணமி முதல் அமாவாசை வரை அவ் வாறே கூட்டி உண்ணலுமாம்.
    வாசகமாவது – பிறர்க்குக் கேட்கும்படி செபித்தல்.
    ரகசியமாவது – தன் செவிக்குக் கேட்கும்படி செபித்தல்.
    மானதமாவது—அக்கரங்களை மனத்தால் பாவித்தல். முன்னைய
    இரு செபங்களிலும் எண்ணிக்கை கூடும்.
    .மானதத்தில் எண்ணிக்கை கூடாது.

    சிவஶ்ரீ அருணந்தி சிவாசாரியர் அருளிச்செய்த சிவஞானசித்தியார் சுபக்கம் மூலமும்,உரையும் என்னும் நூலில் இருந்து…

    இதற்கு திருக்கைலாய பரம்பரை திருவாவடு துறை ஆதீனத்துத் திராவிட மாபாடிய கர்த்தராகி மாதவச் சிவஞான யோகிகள் அருளிய உரையைத் தழுவி, திருவாவடுதுறை ஆதீன சைவப் பிரசாரகரும் தேவகோட்டை சிவாகம சித்தாந்த பரிபாலன சங்கத்துச் சித்தாந்த சாத்திர போதகருமாகிய, தூத்துக்குடி பொ.முத்தையபிள்ளை எழுதிய பொழிப்புரை.

  • The Greatness of Siva Puja

    The Greatness of Siva Puja


    TaHiEnFrEs

    சிவபூஜை

    சிவபூஜை கற்பக மரம் போன்று விரும்பிய அனைத்தையும் தரவல்லது ஆகும். சிவபூசை செய்வது அனைத்து தானங்கள், தருமங்கள், தவங்கள் செய்த பலனையும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனையும் அனைத்து வேள்விகளையும் செய்த பலனையும் ஒருங்கே தருவதாகும். சிவபூசை செய்தவன் வாழ்வின் நிறைவில் சிவகணநாதராகித் தெய்வ விமானத்தில் ஏறி எல்லா உலகங்களிலும் சஞ்சரித்து மகிழ்ந்து பின்பு இறைவன் திருவடியில் இரண்டற கலப்பான்.

    திருமுதுகுன்றத்தில் சிவலிங்கத்திற்கு ஒரு கை நீரால் திருமஞ்சனம் செய்து ஒரு மலரைச் சாத்தினால் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்), மகாமேரு, வாரணாசி எனப்படும் காசி, பிரயாகை, கேகைநதிக்கரை, இமயமலை முதலிய மலைகள் முதலியவற்றில் நெடுங்காலம் தவஞ்செய்து தானதருமங்கள் செய்ததற்கு ஒப்பாகும்.

    விருத்தகிரியில் ஒருநாள் சிவபூசை செய்தால் அனைத்து விரதங்களை நோற்றப் பலனும் கோடி அசுவமேத யாகம் செய்த பலனும் உண்டாகும். அத்தலத்தில் சிவபூசை செய்தவனுக்கு இயமவாதனை இல்லை.

    விருத்தகிரியில் சிவபூசை செய்தவன் எந்தப் பதங்களை விரும்பினாலும் அந்தப் பதமும் வரம்பில்லாத செல்வமும் அவனுக்குக் கிட்டும். மேலும் அட்டமா சித்திகளும் ஞானமும் அவனுக்குச் சித்திக்கும்.

    விருத்தாசலத்தில் சிவபூசை செய்தே இந்திரன், பிரமன், திருமால் முதலியோர் தத்தம் பதவிகளைப் பெற்றார்கள். இந்திராணி, சரசுவதி, இலட்சுமி முதலியோர் இங்கு வழிபட்டே முறையே இந்திரன், பிரமன், திருமால் முதலியோர்க்கு நாயகிகள் ஆனார்கள்.

    சிவலிங்க பூஜை செய்து வழிபட்டவர்கள் பதினாறு இந்திரர்களின் ஆயுட்காலம் சாரூப பதத்தில் இருப்பார்கள்.

    ஒருவர் சிவபூசை செய்யக் கண்டு அதை மனதால் பாவித்து (பாவனைப் பூசை) வழிபடுதலும் நல்ல பலன்களை உண்டாக்கும். அப்படிச் செய்தவர்கள் உலகை ஆளும் வெற்றிச் சிறப்பைப் பெற்று வாழ்ந்து நிறைவாக வீடுபேறு அடைவர்.

    துறவிகளும் கூட சிவபூசை செய்பவர்க்கு நிகரானவர் அல்ல. வஞ்சகனாயினும் சிவபூசை செய்தவன் புண்ணியன் ஆவான். அவன் செய்த பாவங்கள் தாமரையிலையும் தண்ணீரும் போல ஒட்டாமல் இருந்து அவனைப் பிரியும். அதனால் சிவ பூசையானது பிறவி எனும் கொடுநோயை நீக்குகின்ற மருத்துவனாகும்.

    காலைப் பொழுதில் சிவபூசை செய்பவர்கள் சொர்க்காதி போகமும், மதியம் செய்பவர்கள் அசுவமேதயாகப் பலனும், மாலை செய்பவர்கள் பாவ விமோசனமும் பெறுவார்கள். பிரதோச காலத்தில் சிவ வழிபாடு செய்பவர்கள் மூன்று காலங்களிலும் சிவபூசை செய்த பலனைப் பெறுவார்கள்.

    ஸ்ரீ ஞானக்கூத்தர் அருளிய விருத்தாச்சல புராணத்தின் உரைநடைச்சுருக்கத்தின் சிவபூஜை மகிமை சருக்கத்தில் இருந்து…

    நூலாசிரியர் : திரு சே.சக்திவேல்.

    வெளியீடு : தருமை ஆதீனம்

  • The Harmony Between Vedas and Āgamas: Primary Scriptures of Śaivam

    The Harmony Between Vedas and Āgamas: Primary Scriptures of Śaivam


    TaHiEnFrEs

    வேதம் சிவாகமம் என்னும் இரண்டும் முதனூல்கள் எனவும், சிவவாக்கெனவும் சைவசமயத்தில் கொள்ளப்படும். சிவபெருமான்
    ஆன்மாக்கள்மேல் வைத்த கருணையினாலே அவை உணர்ந்து உய்யும்பொருட்டு சதாசிவமூர்த்தியாய் வேதங்களையும்,ஆகமங்களையும் பிரதமசிருட்டி ஆரம்பத்திலே அருளிச்செய்தார்.

    வேதம் நான்கும் சதாசிவமூர்த்தியினுடைய தத்புருஷம் முதலிய நான்கு முகங்களினின்றுந் தோன்றியன. ஆகமங்கள் இருபத் தெட்டும் ஈசானமுகத்தினின்றுந் தோன்றியன. வேதம் நீதி நெறியில் நிற்கும் உலகோர் பொருட்டாம். ஆகமம் ஞானநெறியில் நிற்கும் உயர்ந்தோர் பொருட்டாம். வேதம் சூத்திரம் போலவும், ஆகமம் அதன் வியாக்கியானம் போலவும் ஒருவராலேயே அருளப்பட்டமையின் இரண்டும் சமத்துவமுடையன என்பது உணரப்படும்.

    “வேதநூல் சைவநூலென் றிரண்டே நூல்கள்
    வேறுரைக்கும் நூலிவற்றின் விரிந்த நூல்கள்
    ஆதிநூல் அநாதிஅம லன்தருநூ லிரண்டும்
    ஆரணநூல் பொதுசைவம் அருஞ்சிறப்பு நூலாம்
    நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும்
    நிகழ்த்தியது…”

    எனச் சிவஞானசித்தியாரும்,

    “வேதமொ டாகமம் மெய்யாம் இறைவன்நூல்
    ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன
    நாதன் உரைஅவை நாடில் இரண்டந்தம்
    பேதம தென்னில் பெரியோர்க் கபேதமே “

    எனத் திருமந்திரமும்,

    “உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும்
    நிலவுமெய்ந் நெறிசிவ நெறிய தென்பதும்”
    எனத் திருத்தொண்டர் புராணமும் கூறுமாற்றால்
    இனிது விளங்கும்.

    சிவபெருமான் அருளிச்செய்த வேதங்கள் பஞ்சபூதங்களையும் உயிர்களையும் தேவர்களையும் பிரமமெனக் கூறுவது என்னையெனின்; அழியாத சிவபெருமானைக் குறித்து வேதங்கள் கூறியவை மாத்திரம் விதிவாதமாம்; ஒழிந்தன முகமனாம்.
    சதுர்வேதங்களாலும் முதற்கடவுள் எனக் கூறப்பட்டவர் சிவபெருமானே என்னும் உண்மை சதுர்வேததாற்பரிய சங்கிரகம்
    முதலிய நூல்களாலே நன்கு உணரப்படும்.

    சிவபெருமானாலே திருவாய்மலர்ந்தருளப்பட்ட வேதம், சுயம்பு என வழங் கப்படுவது சுயம்புவாகிய அப் பரமேசுரனாலே செய்யப்பட்ட காரணம் பற்றியேயாம்.

    சைவ சாஸ்திர பரிபாலனம்(1940) என்னும் நூலில் இருந்து…(சமய சம்பந்தமான மாத வெளியீடு)

    பத்திராதிபர்: யாழ்ப்பாணம் அச்சுவேலி சிவஸ்ரீ ச.குமாரசுவாமிக் குருக்கள்.

  • Iconography of Śiva in Sangam Poetry

    Iconography of Śiva in Sangam Poetry


    TaHiEnFrEs

    சிவபெருமானது உருவ வருணனை

    நுதலது இமையா நாட்டம் – வான் இலங்கு பிறை அன்ன விலங்குவால் வைஎயிறு
    எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடரும் சென்னி
    யாழ்கெழு மணிமிடற்று அந்தணன்
    செவ்வான் அன்ன மேனி
    மார்பினஃதே மையில் நுண்ஞாண்
    கொன்றைத் தாரன் மாலையன் கண்ணியன்
    கையது கணிச்சி மழு வேல்
    சேர்ந்தோள் உமையே வரிகிளர் வயமான் உரிவை உடுத்தவன் ஊர்ந்தது ஏறே

    அகநானூறு கடவுள் வாழ்த்து

    என்ற தொடர்களால் சிவபெருமான் நெற்றிக்கண்ணோடு முக்கண்ணனாய், செஞ்சடையனாய், பிறைசூடியாய், வேதம் ஓதுபவனாய், செம்மேனியின் மார்பில் பூணூல் அணிந்து, கொன்றை சூடி, கைகளில் கணிச்சி, மழு, வேல் இவற்றை ஏந்தி, அம்மையப்பனாய், ஏறு ஊர்பவனாய்ப் புலித்தோலாடையனாய்ச் சான்றோர்கள் உள்ளத்தில் காட்சி வழங்கும் செயல் கூறப்பட்டுள்ளது.

    கறைமிடறு அணியலும் அணிந்தன்று சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப. நீர்அறவு அறியாக் கரகத்தன் (புறநானூறு -1)

    நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் (ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து) என்பனவற்றால், அவன் விடக்கறைபொருந்திய நீலகண்டன், இடபக்கொடியன், நீர்நிறைந்த கமண்டலத்தோடு இருக்கின்றவன், பார்வதியைத் தன் உடம்பின் ஒரு கூறாகக் கொண்டுள்ளவன் என்ற செய்திகள் பெறப்படுகின்றன. பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாகக் கருதப்படும் மருட்பாவில்,

    பொன்னார் எயில் எரி ஊட்டிய வில்லன் குறங்கு அறைந்த வெண்மணி ஆர்க்கும் விழவினன் நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உருவா ஈரணிபெற்ற எழில்தகையன் சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக்கடவுள் என அவன் வில்லும் சூலமும் பிடித்து, மணியையும் உடுக்கையையும் ஒலிப்பித்து, இரண்டு உருவிற்கு ஏற்ப ஈரணிகளால் அழகாகக் காட்சி வழங்கும் திறம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பண்டைத் தமிழகத்தில் சிவன் என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரையில் திரு. தி.வே கோபாலையர்.