Śivapunya Teḷivu: A Compendium of Offerings to Śivabhaktas and Their Benefits


TaHiEnFrEs

சிவபுண்ணியத்தெளிவு என்னும் நூலில் கண்டபடி சிவனடியார்களுக்கு கைங்கர்யம் அளிக்கும் பொருட்களும் அதன் பயன்களும்.

  1. கௌபீனம் (கோவணம்) – ஆயிரம் கோடியுகம் சிவலோக வாசம்
    (தெளிவு 125)
  2. கம்பளம் – கம்பளத்தில் உள்ள ஒவ்வொரு
    முடிக்கும் ஒரு கழஞ்சு பொன்
    கொடுத்த பலன் (தெளிவு 126)
  3. புலித்தோல் (அ) மான்தோல் – கம்பளத்திற்குச்சொன்ன பலன்.(தெளிவு 127)
  4. சாமரம், அரிசி, மலர், கனி, தீபம்
    முதலியன – ஒவ்வோர்
    அரிசிக்கும்
    மலருக்கும்
    ஆயிரம் யுகம் சிவபுரத்தில் வாசம்.(தெளிவு 90,91)

5.சிவலிங்கம் – ஆயிரம்
கற்பம் சிவலோகவாசம்.
(தெளிவு 95)

6.சிவாகமம் – அறியாக் குழந்தைப் பருவம் முதல் செய்த
கொலைப் பாவங்கள் தீரும்
(தெளிவு 117).

  1. பாடலம்(நண்பகலில் மலரும் ஒரு வகை மலர்)
    உற்பலம்(குவளை, செங்கழுநீர்ப் பூ, நீலோற்பலம், கருநெய்தல் போன்ற மலர்களைக் குறிக்கும்)
    முதலியன கலந்த
    சுகந்த நீர் – வருணன் பதம் (தெளிவு 132)

8.கையில்
அன்பளிப்பு – திருமால் உலகில் உறைதல்
(தெளிவு 133)

  1. சுக்கு முதலிய
    மருந்துகள் – ஆயிரம் கோடி கற்பம் ஆதவன் உலகு
    (தெளிவு.134).
  2. நோயகல
    மருந்து – நூறுகோடி யுகம் சிவலோக வாசம்.
    (தெளிவு.135).

11.விபூதிப்
பெட்டி – தீர்த்தாடனம் செய்த பலன்(தெளிவு 136).

  1. சிவஞானிக்குச் சிவாகம தானம் – சிவானந்தம் பலன் (தெளிவு. 137).
  2. படிப்போர்க்கு ஆமகதானம் – சிவஞானம் பலன் (தெளிவு. 138)
  3. உருத்திராக்க
    மணிமாலை – உருத்திரன் உலகம் (தெளிவு. 139).

]5. கைத்தடியும்,
குடையும் – மனைவியொடு மன்னராய்ப் பிறப்பர்
(தெளிவு.140).

  1. பாதுகை(காலலணி ) – சிவபுரம் (தெளிவு 141).