The Divine Compassion of Śiva: Ācāryas Revealing the Essence of Vedas and Āgamas through Tirumurai and Meykanda Śāstras


TaHiEnFrEs

ஸ்ரீமத் வேதாகமங்களைக் கற்றுத் தெளிந்துணர, ஒருவனுடைய முழு ஆயுட்காலமும் போதாதபடி, அவை அளவாற் பெருகியிருக்கின்றனவாதலின், கருணைக்கடலாகிய சிவபெருமான், நம்மீது வைத்த பெருங்கருணையினால், சமயக்குரவர்களும், சந்தான குரவர்களும் ஆகிய ஆசாரிய மூர்த்திகளை இந்நிலவுலகில் அவதரிக்கச் செய்து, அவர்கள் வாயிலாகத் திருமுறைகளையும் மெய்கண்ட நூல்களையும் வேதாகம சாரமாக நமக்கு வழங்கியருளினார். இவ்வருளாசிரியன்மார்கள், சீவபோதம் கழன்று சிவபோதமயமாகி நின்றவர்கள் ஆதலின், இவர்களது திருவாக்கு நம்மனைய பசுவாக்குகள் போலாகாது, பதிவாக்காகவே கொள்ளப்பெறும்.

தருமையாதீனப் புலவர் வயிநாகரம் திரு.வே. இராமநாதன் செட்டியார் அவர்கள் ‘திருமுறைகளும் மெய்கண்ட நூல்களும்’ என்னும் தலைப்பில் வரைந்த கட்டுரையின் ஒரு பகுதி…