The Steps of Śiva Pūjā: A Comprehensive Overview


TaHiEnFrEs

சிவபூஜை

சிவபூசையாவது, புட்பம் திருமஞ்சனம் முதலிய உபகரணங்கள் கொண்டு, ஆத்துமசுத்தி தானசுத்தி திரவியசுத்தி மந்திரசுத்தி இலிங்கசுத்தி என்னும் பஞ்ச சுத்திகளும் செய்து, சிவலிங்கத்தின் பீடத்திலே சத்தியாகி சத்தி பரியந்த பதுமமாகிய சிவாசனம் பூசித்து, அதன்மேல் இலிங்கத்திலே வித்தியாதேகமாகிய மூர்த்தியை நியாசஞ்செய்து, அவ்வித்தியாதேகத்துக்குச் சீவனாய் உள்ள நிஷ்களரூபரும் ஞானானந்தமயரும் சருவகர்த்தாவும் சர்வவியாபகருமாகும் பரமசிவனாகிய மூர்த்திமானைத் துவாதசாந்தத்தின் மேலே தியானித்து, முன்னே நியாசஞ் செய்த வித்தியாதேகத்தில் ஆவாகித்து, “சுவாமி, சருவ சகத்துக்கும் நாதரே, பூசையின் முடிவு எதுவரையுமோ அதுவரையும் நீர் பிரீதியுடன் இவ்விலிங்கத்திலே சாந்நித்தியராய் இருக்க வேண்டுகிறேன்.” என்று விண்ணப்பம் செய்து, பூசித்து ஸ்தோத்திரம் பிரதக்ஷிணம் நமஸ்காரம் பண்ணி முடித்தலாம்.

சண்டேச நாயனார் புராண சூசனத்தில் பண்டிதர் மு.கந்தையா அவர்கள்.